கழுவி சுத்தம் செய்த மைசூர் பருப்பு – 1 கப்
சுத்தம் செய்து நறுக்கிய பசளிக் கீரை – 2 கப்
நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் – சிறிதளவு
பூடு – 2 பல்
மிளகு தூள் – 1/2 தேக்கரண்டி
கறி வேப்பிலை – தேவையான அளவு
தேங்காய்ப் பால் – 1/4 கப்
உப்பு, தேசிக்காய் புளி – தேவையான அளவு
ஒரு பாத்திரத்தில் பருப்பு, வெங்காயம், பச்சை மிளகாயுடன் பருப்பு வேகுமளவு நீர் விட்டு அவிய விடவும்.
வெந்ததும் அடுப்பை குறைத்து பருப்பை மசிக்கவும்.
தட்டி நசுக்கிய பூடு, மிளகு தூள் பசளிக் கீரை, கறிவேப்பிலை, உப்பு,தேங்காய்ப் பால் சேர்த்து வேக விடவும்.
வெந்ததும் தேசிக்காய் புளி சேர்த்து இறக்கி சாதத்துடன் பரிமாறவும்.
தலைமுடி வளர பசளி, பருப்பு மிகவும் சிறந்த உணவு.