விடுமுறை நாளொன்று…

இந்த விடுமுறைக்கு நாங்கள் சிகிரியா குன்றுக்கு (இலங்கை) சென்றோம்.
அதிகாலை 4.30 மணியளவில் கொழும்பிலிருந்து காரில் பயணத்தை தொடங்கினோம்.
காலை 7 மணியளவில் சிகிரியாவை சென்றடைந்தோம்.
Continue reading

இந்த விடுமுறைக்கு நாங்கள் சிகிரியா குன்றுக்கு (இலங்கை) சென்றோம்.
அதிகாலை 4.30 மணியளவில் கொழும்பிலிருந்து காரில் பயணத்தை தொடங்கினோம்.
காலை 7 மணியளவில் சிகிரியாவை சென்றடைந்தோம்.
Continue reading →
இன்றைய காலகட்டத்தில் மக்கள் தொகை அதிகரிக்க அவர்களின் தேவைகளும் அதிகரிக்க அவற்றை பூர்த்தி செய்வதற்கு மனிதன் நேரம், காலம் பார்க்காது ஓடி ஓடி உழைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான். அவனது வாழ்க்கை இயந்திரத்தனமாக மாறிவிட்டது. இப்படியான சூழ்நிலையில் மனிதன் சற்று ஓய்வெடுக்கவும், ஒன்றுசேர்ந்து இன்புற்றிருக்கவும் பண்டிகைகள் துணை புரிகின்றன. அது மட்டுமல்லாது மனிதன் தனது மதம், கலாச்சாரம், கலைகள், வாழ்க்கைமுறை, கட்டுப்பாடுகள், மற்றும் பாரம்பரிய விளையாட்டுக்கள் என்பனவற்றை மறக்காமல் இருக்க பண்டிகைகள் காரணமாக அமைகின்றன.
Continue reading →
திருமணம் என்பது ஒரு ஆணும் ஒரு பெண்ணும் இணைந்து வாழ்க்கையை ஆரம்பிப்பதற்கு நடாத்தப்படும் ஒரு புனிதமான சடங்கு. திருமணத்தின் பின் இருவரும் பொறுப்புடனும் விட்டுக்கொடுத்தலுடனும் சில விதிமுறைகளைப் பின்பற்றி நடந்தாலே மகிழ்ச்சியாக வாழ முடியும்.
முற்காலத்தில் பெண்கள் கணவனுக்காகவும் பிள்ளைகளுக்காகவுமே தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தார்கள். அவர்களுக்கென்று விருப்பு வெறுப்பு பெரிதாக ஏதும் இருந்ததில்லை.
Continue reading →
இயற்கை தந்துகொண்டிருக்கும் வரங்களில் ஒன்று நீர். நீர் இல்லாமல் இவ்வுலகில் எந்த உயிரினமும் உயிர் வாழ முடியாது. நீரை மழை தருகிறது. அந்த மழையை இயற்கை எமக்குத் தருகிறது.
“நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான் இன்று அமையாது ஒழுக்கு.”
என்ற திருவள்ளுவரின் திருக்குறள், நீர் இல்லாமல் இந்த உலகமும் உயிர்களும் நிலைத்து நிற்க முடியாது என்பதையும் நீர் கிடைப்பதற்கு மழையும் அவசியம் என்பதையும் குறிப்பிடுகின்றது.
Continue reading →
ஒரு மனிதன் உயிர் வாழ்வதற்கு அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம் எவ்வளவு முக்கியமானதோ அதே போல கல்வி அறிவும் மிகவும் அவசியமாகும். ஒவ்வொருவருக்கும் கல்வி கற்கும் உரிமை உள்ளது. பிள்ளைகளுக்கு கல்வி அறிவைக் கொடுப்பது பெற்றோரின் கடமையாகும். மாணவர்களுக்கு பிழையில்லாது சரியான முறையில் கல்வியையும் ஒழுக்கத்தையும் புகட்டுவது ஆசிரியரின் கடமையாகும்.
Continue reading →
மரங்கள் அடர்த்தியாக வளர்ந்த நிலப்பகுதியை காடு என்கின்றோம்.
காட்டில் மரங்களுடன் விலங்குகளும் வாழ்கின்றன.
ஒரு நாட்டுக்கு காடு மிகவும் இன்றியமையாததாகும்.
காடுகள் பூமியின் வெப்பத்தைக் குறைப்பதற்கும், உயிரினங்களின் வாழ்க்கைக்குத் தேவையான நீரைப் பெறுவதற்கும் மழை பொழியச் செய்கின்றன.
வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்துகின்றன.
மண்ணரிப்பைத் தடுக்கின்றன.
காடுகள் வளிமண்டலத்திலுள்ள காபனீரொட்சைட்டை உறிஞ்சி ஒட்சிசனைத் தருகின்றன.
பல நோய்களுக்கு மருந்தாகும் அரியவகை மூலிகைகளைக் கொண்டுள்ளன.
Continue reading →
சித்திரைப் புத்தாண்டானது இலங்கையில் சிங்கள மற்றும் தமிழ் மக்களால் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும்.
சித்திரை மாதத்தின் முதல் நாள் புத்தாண்டு பிறக்கிறது.
இப்பண்டிகை அன்றும் அதற்கு முதல் நாளுமாக இரு நாட்கள் தேசிய விடுமுறையாக அறிவிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது.
முதல் நாள் வீட்டை சுத்தம் செய்து பண்டிகை கொண்டாடுவதற்காக ஆயத்தம் செய்வார்கள்.
பண்டிகை அன்று தலைக்கு மருத்துநீர் வைத்து தோய்ந்து புத்தாடை அணிந்து கோவிலுக்குச் செல்வார்கள்.
புத்தாண்டு பிறக்கும் நேரம் பட்டாசுகள் கொழுத்தி மகிழ்வர்.
வீடுகளில் பொங்கல் செய்து வழிபாட்டறையில் தேங்காய், பழம், பாக்கு, வெற்றிலை போன்ற மங்கலப் பொருட்களுடன் வைத்து கடவுளுக்குப் படைத்து உண்பார்கள்.
பலகாரங்கள் செய்து உறவினருக்கும் அயலவர்க்கும் நண்பர்களுக்கும் கொடுத்து மகிழ்வார்கள்.
சித்திரை வருடப்பிறப்பன்று குறித்த நல்ல நேரத்தில் வீட்டில் உள்ள பெரியவர்கள் மற்றவர்களுக்கு பணம், கைவிசேடமாகக் கொடுத்து ஆசிர்வதிப்பர்.
பண்டிகை அன்று போர்த் தேங்காய் உடைத்தல், வழுக்கு மரம் ஏறல், முட்டி உடைத்தல், கிளித்தட்டு போன்ற பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடி மகிழ்வர்.
ஏனையோருக்கு உதவுதல், ஒற்றுமை, பொறுமை, பெரியோரை மதித்தல் போன்ற நற்குணங்களை பெறுவதற்கு பண்டிகைகள் வழிவகுக்கின்றன.
*****

பூமியின் பெரும்பகுதி நீரினால் ஆனது. அந்நீரில் கிட்டதட்ட 1% மான நீர் தான் எமக்கு பயன்படக்கூடிய நல்ல நீர் எனவும் அதிலும் பாதி நீர் பனிக்கட்டிகளாக உறைந்து கிடக்கின்றது எனவும் அறியப்படுகின்றது. நல்ல நீரானது மழை மூலம் கிணறு, ஆறு, குளம், நீர் நிலைகள், என்பவற்றில் நிறைந்து கிடைக்கின்றது.
பூமியில் வாழும் உயிரினங்கள் அனைத்தினதும் முக்கிய தேவைகளைப் பூர்த்தி செய்கின்றது நீர். எமது அடிப்படைத் தேவைகளில் நீர் முக்கிய பங்கு வகிக்கின்றது. குடிப்பதற்கு, சமைப்பதற்கு, குளிப்பதற்கு, துவைப்பதற்கு என எமது தேவைகளை நிறைவேற்றுவதோடு பயிர்கள் விளைந்து உணவாவதற்கும் தேவைப்படுகின்றது. நீர் உணவாக மட்டுமன்றி மருந்தாகவும் பயன்படுகின்றது. எனவே எமக்குக் கிடைக்கும் நல்ல நீரினை வீணாக்காது சிக்கனமாக உபயோகிப்பது மிக மிக அவசியமாகும்.
Continue reading →
மே தினம் எனப்படும் உலகத் தொழிலாளர் தினம் ஆண்டு தோறும் மே மாதம் முதலாம் திகதி கொண்டாடப்படுகிறது.
Continue reading →
யானை பேசுகிறது
நான் மிகவும் பலசாலி. மனிதர்களால் சுமக்க முடியாத பாரம் மிக்க பொருட்களை என்னால் தூக்கிச் செல்ல முடியும். எனது பலம் வாய்ந்த தும்பிக்கை அதற்கு உதவுகிறது. நாங்கள் தும்பிக்கை மூலமே உணவும் நீரும் உட்கொள்கிறோம். தாவரங்களே எமது உணவு. மரக்கிளைகளை முறித்து உணவைப் பெறுவதற்கு தும்பிக்கையை பயன்படுத்துவோம். தும்பிக்கையின் நுனியில் உள்ள இரண்டு விரல்கள் மூலம் சின்ன குண்டுஊசியை கூட எடுத்துவிடுவோம். வெப்பத்தில் இருந்தும், பூச்சிக்கடியிலிருந்தும் எம்மைப் பாதுகாப்பதற்கு தும்பிக்கையால் சேற்றை அள்ளி உடம்பில் பூசிக் கொள்வோம்.
Continue reading →