
“குழந்தை வளர்ப்பில் நீங்கள் செய்யவேண்டிய முதற்காரியம் என்னவென்றால், பழுதுபட்ட உங்கள் உள்ளங்களின் பாதிப்பு அவர்களுக்கும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதுதான்.”
*****
“நாக்கு கொடிய மிருகம். அதை எப்போதும் கட்டியே வை.”
*****
“உங்கள் பாத்திரத்தில் உணவிருந்தால்,
உடுத்த உடையிருந்தால்,
தலை மேல் கூரையிருந்தால்,
உறக்கம் கொள்ள இடமிருந்தால்,
உலகின் 75 சதவிகித மக்களை விட நீங்கள் மேலானவரே!
உங்கள் வங்கிக் கணக்கில் பணம் இருந்தால்,
உங்கள் பர்சில் சிறிது சில்லறை இருந்தால்,
உலகின் முதல் 8 சதவிகித பணக்காரர்களில் நீங்களும் ஒருவரே!
நோய், நொடியின்றி, புத்துணர்ச்சியோடு உங்கள் பொழுது புணர்ந்தால்,
அதே நாளில் இறக்கப் போகும் கோடி மக்களை விட நீங்கள் அதிகம் ஆசீர்வதிக்கப்பட்டவரே!
நீங்கள் போரின் அனுபவம் பெறாதிருந்தால்,
எந்த வித சித்திரவதைக்கும் உள்ளாகாதிருந்தால்,
தினம் தினம் செத்துப் பிழைக்கும், கோடானு கோடி மக்களை விட நீங்கள் அதிர்ஷ்டசாலிகளே!
மேற்கூறியவைகளை தங்களால் படித்துப் பார்க்க முடிந்தால்,
பார்வையற்றுக் கிடக்கும் 3 கோடி சக மனிதர்களை விடவும் நீங்கள் அதிகம் கொடுத்து வைத்தவர்களே!!!”
*****