
“எனது மதம் மட்டுமே சிறந்தது.
அது மட்டுமே எனக்கு வேண்டும்”
எனச் சொல்லும்……
ஒரு இந்துவோ அல்லது
ஒரு இஸ்லாமியரோ அல்லது
ஒரு கிருத்துவரோ அல்லது
மற்ற மதத்தவரோ…,
ஆபத்து என்றவுடன் ரத்த வங்கிகளில்
ஏனய்யா ‘o’ நெகடிவ் கொடுங்க…
‘b’ பாசிட்டிவ் கொடுங்கனு கேக்குறிங்க ?
“ஒரு யூனிட் இந்து ரத்தம் கொடு” இல்ல…
“இரண்டு யூனிட் முஸ்லிம் ரத்தம் கொடு” இல்ல…
“மூணு யூனிட் கிறித்துவ ரத்தம் கொடு” ன்னு
கேக்க வேண்டியதுதானே.?
அந்த நொடியில் மதத்தை மறக்கும்
நீங்கள் ஏன் மற்ற நேரங்களில்
இறுக்கிப் பிடித்துக்கொண்டிருக்கிறீர்கள் ?”
*****
“தன்னைப் பூரணமாக அறியாதவன் ஒருநாளும் பிறரை சரியாக அறிய முடியாது.
தன்னை அறிந்தவனுக்கு என்றும் துன்பம் இல்லை.”
*****
“தலைக் கனம் இழப்பவர்களே தலை நிமிர முடியும்.
தீக்குச்சி தன் தலைக் கனத்தை இழந்த பின்புதான் ஒளியை வெளியிடுகின்றது.”
*****
“நாம் வாழ்வில் செய்யும் மிகப் பெரிய சாதனை – பிறரை வேதனை செய்யாது வாழ்வதே.”
*****