
“நீங்கள் அனுபவிக்கும் எதுவுமே வாழ்க்கைதான்.
மரணம் என்பதும் கூட வாழ்க்கைதான்.
ஆனால் அது உங்கள் வாழ்க்கையின் கடைசி விநாடியில் வருகிறது, அவ்வளவுதான்.”
*****
“நம் நேசத்துக்குரியவர் நம்மை காயப்படுத்துவதைவிட வலிமை மிக்கது நம்மால் காயப்பட்டவர் நம்மை தொடர்ந்து நேசிப்பது.”
*****
“பேசும் முறைகள்…!
தாயிடம்……………………அன்பாக…………….பேசுங்கள்..!
தந்தையுடன்………………பண்பாக…………….பேசுங்கள்..!
ஆசிரியரிடம்……………..அடக்கமாக…………பேசுங்கள்..!
துணைவியுடன்………….உண்மையாக……..பேசுங்கள்..!
சகோதரனிடம்…………..அளவாக……………..பேசுங்கள்..!
சகோதரியிடம்……………பாசத்தோடு………..பேசுங்கள்..!
குழந்தைகளிடம்………..ஆர்வத்தோடு………பேசுங்கள்..!
உறவினர்களிடம்……….பரிவோடு……………பேசுங்கள்..!
நண்பர்களிடம்…………..உரிமையோடு………பேசுங்கள்..!
அதிகாரியிடம்…………..பணிவோடு………….பேசுங்கள்..!
வியாபாரியிடம்…………கறாராக………………பேசுங்கள்..!
வாடிக்கையாளரிடம்….நேர்மையாக………..பேசுங்கள்..!
தொழிலாளரிடம்……….மனிதநேயத்தோடு..பேசுங்கள்..!
அரசியல்வாதியிடம்…..ஜாக்கிரதையாக…..பேசுங்கள்..!
இறைவனிடம்…………..மெளனமாக…………பேசுங்கள்..!”
*****
“தோல்வி வரும்போது அதற்கு இதயத்தில் இடம் கொடுக்காதே…
வெற்றி வரும்போது அதற்கு தலையில் இடம் கொடுக்காதே…”
*****
“வாழ்க்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள்:
* எந்த விசயமாக இருந்தாலும் அல்லது எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதை அழகாக கையாளுங்கள்.
* அர்த்தமில்லாமலும்,தேவையில்லாமலும் பின் விளைவுகளை அறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை விடுங்கள்.
* தானே பெரியவன்,தானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.
* விட்டுக் கொடுங்கள்.
* சில நேரங்களில்,சில சங்கடங்களை சகித்துத்தான் ஆக வேண்டும் என்பதை உணருங்கள்.
* நீங்கள் சொன்னதே சரி,செய்வதே சரி என்று கடைசி வரை வாதாடாதிர்கள்.
* குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள்.
* உண்மை எது,பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கும்,அங்கே கேட்டதை இங்கும் சொல்வதை விடுங்கள்.
* மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கவலைப்படாதீர்கள்.
* அளவுக்கதிகமாய் தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள்.
* எல்லோரிடத்திலும் எல்லா விசயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டா இல்லையோ,சொல்லி கொண்டிருக்காதீர்கள்.
* கேள்விபடுகிற எல்லா விசயங்களையும் அப்படியே நம்பி விடாதீர்கள்.
* உங்கள் கருத்துகளில் உடும்புபிடியை இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக்கொள்ளுங்கள்.
* மற்றவர்களுக்கு உரிய மரியாதையை காட்டவும்,இனிய இதமான சொற்களை பயன்படுத்தவும் மறக்காதீர்கள்.
* புன்முறுவல் காட்டவும்,சிற்சில அன்பான சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாமல் நடந்து கொள்ளாதீர்கள்.
* பேச்சிலும்,நடத்தையிலும்,திமிர்த்தனத்தயும் தேவையில்லாத மிடுக்கையும் தவிர்த்து அடக்கத்தையும் பண்பாட்டையும் காட்டுங்கள்.
* அவ்வபோது நண்பர்கள் உறவினார்கள் நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.
* பிணக்கு ஏற்படும்போது அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவக்க முன்வாருங்கள்.
*தேவையான இடங்களில் நன்றியும்,பாராட்டையும் சொல்ல மறவாதீர்கள்.”
*****