நீர் பாதுகாப்பு

பூமியின் பெரும்பகுதி நீரினால் ஆனது. அந்நீரில் கிட்டதட்ட 1% மான நீர் தான் எமக்கு பயன்படக்கூடிய நல்ல நீர் எனவும் அதிலும் பாதி நீர் பனிக்கட்டிகளாக உறைந்து கிடக்கின்றது எனவும் அறியப்படுகின்றது. நல்ல நீரானது மழை மூலம் கிணறு, ஆறு, குளம், நீர் நிலைகள், என்பவற்றில் நிறைந்து கிடைக்கின்றது.
பூமியில் வாழும் உயிரினங்கள் அனைத்தினதும் முக்கிய தேவைகளைப் பூர்த்தி செய்கின்றது நீர். எமது அடிப்படைத் தேவைகளில் நீர் முக்கிய பங்கு வகிக்கின்றது. குடிப்பதற்கு, சமைப்பதற்கு, குளிப்பதற்கு, துவைப்பதற்கு என எமது தேவைகளை நிறைவேற்றுவதோடு பயிர்கள் விளைந்து உணவாவதற்கும் தேவைப்படுகின்றது. நீர் உணவாக மட்டுமன்றி மருந்தாகவும் பயன்படுகின்றது. எனவே எமக்குக் கிடைக்கும் நல்ல நீரினை வீணாக்காது சிக்கனமாக உபயோகிப்பது மிக மிக அவசியமாகும்.
Continue reading