நிரந்தர வெற்றி

அடுத்தவர் வெற்றியில் பொறாமைப்பட்டு
மற்றவரை மிதித்து முன்னேறி
குறுக்கு வழியில் சென்று
தகுதிக்கு மீறி ஆசைப்பட்டு
கிடைக்கும் வெற்றி
நிலைப்பது
குறுகிய காலமே…
அடுத்தவர் வெற்றியில் பொறாமைப்பட்டு
மற்றவரை மிதித்து முன்னேறி
குறுக்கு வழியில் சென்று
தகுதிக்கு மீறி ஆசைப்பட்டு
கிடைக்கும் வெற்றி
நிலைப்பது
குறுகிய காலமே…
அவளை பார்த்த நொடி
நின்று வந்தது
உயிர் மூச்சு…!!!
“புத்தி உள்ளவன் பிழைத்துக்கொள்வான்
கருத்துள்ள கதை…
ரஷ்ய ஜெயிலில் மூன்று தூக்குதண்டனைக் கைதிகள் இருந்தனர்.இறக்குமுன் அவர்களின் கடைசி மூன்று ஆசைகள் என்ன என்று கேட்கப்பட்டது.
முதல் கைதியின் ஆசை:நல்ல பெண்,நல்ல மது ,லெனின் சமாதிக்கு அருகில் புதைக்கப்பட வேண்டும்.மூன்று ஆசைகளும் நிறைவேற்றப்பட்டன.
இரண்டாவது கைதியின் ஆசைகள் ;நல்ல பெண்,நல்ல உணவு,ஸ்டாலின் சமாதிக்கருகில் புதைக்கப்பட வேண்டும்.அவனுடைய ஆசைகளும் நிறைவேற்றி வைக்கப்பட்டன.
மூன்றாவது கைதி தனது முதல் ஆசையாக மாம்பழம் கேட்டான்.அப்போது மாம்பழ சீசன் இல்லை.எனவே தூக்கு தண்டனை ஆறு மாதம் ஒத்தி வைக்கப்பட்டது.
ஆறு மாதத்திற்குப்பின் மாம்பழம் வாங்கிக் கொடுத்து இரண்டாவது ஆசையைக் கேட்டனர்.செர்ரிப் பழம் என்று பதில் வந்தது.அப்போது செர்ரிப் பழ சீசன் இல்லை என்பதால் மறுபடியும் தூக்கு தண்டனை ஆறு மாதம் தள்ளி வைக்கப்பட்டு,பின் செர்ரிப்பழம் வாங்கிக் கொடுக்கப்பட்டது.
மூன்றாவது ஆசையாக அவன் சொன்னான்,”என் உடல் தற்போதைய அதிபரின் சமாதிக்கருகில் புதைக்கப்பட வேண்டும்.”அதிகாரிகள் அதிர்ந்துவிட்டனர்,”என்ன சொல்கிறாய்,நீ?அவர் உயிருடன் அல்லவா இருக்கிறார்!” கைதி அமைதியாகச் சொன்னான்,”அவர் இறக்கும் வரை நான் காத்திருக்கிறேன்.””
*****
உன் பார்வையை வீசி
சலனப்படுத்திவிட்டாய்
உள்ளத்தை…
உன்னைத் தீண்ட
கட்டளை அனுப்புகின்றது
விழிகளுக்கு…
அன்றலர்ந்த மலர்போல் வந்து
உள்ளத்தை தழுவிச் சென்றாய்
இன்றோ
விண்ணுலக தேவதைபோல் வந்து
உள்ளத்தில் பதிந்துவிட்டாய்…
“சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் சக்தியை இறைவன் மனிதனுக்கும் தவளைக்கும் ஒரே மாதிரி தான் கொடுத்து இருக்கிறான்.
ஒரு தவளையை பிடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள்,
தண்ணீரின் வெப்பம் அதிகரிக்கும்போது தவளை தன் உடலை அந்த வெப்ப நிலைக்கு ஏற்பமாற்றி கொண்டே வரும்……வெப்பம் ஏற ஏற தவளையும் அந்த வெப்பநிலைக்கு ஏற்ப தன் உடலை அந்த வெப்பத்துக்கு ஏற்ப மாற்றி கொள்ளும்.
மந்திரத்தால்
கட்டி வைத்தாயோ
உன்னை பார்த்ததும்
அசைய மறுக்கின்றனவே
விழிகள்…
“ஒரு யுத்தத்தில் எதிரி நாட்டு இளவரசனை உயிரோடு பிடித்து இராஜாவின் முன்பு நிறுத்தினர்.
இளவரசன் தன் உயிருக்காகக் கெஞ்சி மன்றாடி தன்னை மன்னிக்கும்படியாக கேட்டுக்கொண்டான்.
அதற்கு ஒரு நிபந்தனை இருக்கிறது என்றார் வெற்றி பெற்ற ராஜா .
Continue reading →உன்னை கண்டதும்
இறக்கை முளைத்து பறக்கின்றது
என் இதயம் மட்டுமல்ல
கடிகார முட்களுமே…!!!
“குடும்பத்திலும் சரி அலுவலத்திலும் சரி உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல் இருக்கவும், ஏற்பட்ட விரிசல்கள் மேலும் பெரிதாகாமல் இருக்க:
* நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.
* அர்த்தமில்லாமலும், பின்விளைவு அறியாமலும் பேசிக்கொண்டிருப்பதை விடுங்கள்.
* எந்த விஷயத்தையும் பிரச்சனையையும் நாசூக்காக கையாளுங்கள், விட்டுக்கொடுங்கள்.
* நீங்கள் சொன்னதே சரி, செய்ததே சரி என்று வாதாடாதீர்கள், குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள்.
* உண்மை எது, பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும், அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள்.
* மற்றவர்களைவிட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வப்படாதீர்கள்.
*அளவுக்கதிகமாய், தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள்.
* எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ, இல்லையோ சொல்லிக்கொண்டிருக்காதீர்கள்.
* கேள்விப்படுகின்ற எல்லா விஷங்களையும் நம்பி விடாதீர்கள்.
* அற்ப விஷயங்களைப் பெரிதுபடுத்தாதீர்கள்.
* உங்கள் கருத்துக்களில் உடும்புப் பிடியாய் இல்லாமல், கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள்.
* மற்றவர் கருத்துக்களில் செயல்களை, நடக்கின்ற நிகழ்ச்சிகளைத் தவறாக புரிந்து கொள்ளாதீர்கள்.
* மற்றவர்களுக்குரிய மரியாதை காட்டவும், இனிய, இதமான சொற்களைப் பயன்படுத்தவும் தவறாதீர்கள்.
* புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாததுபோல் நடந்து கொள்ளாதீர்கள்.
* பேச்சிலும், நடத்தையிலும் பண்பில்லாத வார்த்தைகளையும், தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதை தவிர்த்து அடக்கத்தையும் பண்பையும் காட்டுங்கள்.
* அவ்வப்போது நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.
* பிரச்சினைகள் ஏற்படும்போது அடுத்தவர் முதலில் இறங்கி வரவேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சைத் துவக்க முன் வாருங்கள்.”
*****