காதல் சொல்வீர்…

காதலில் வீழ்ந்து
விண்ணில் பறந்து
பொறுப்பை மறந்து
வள்ளலாகி
உழைப்பை துறந்து
உலகம் சுற்றி
சொத்தை இழந்து
ஏழ்மை சூழ…
காதலில் வீழ்ந்து
விண்ணில் பறந்து
பொறுப்பை மறந்து
வள்ளலாகி
உழைப்பை துறந்து
உலகம் சுற்றி
சொத்தை இழந்து
ஏழ்மை சூழ…
சகியே!
விலகாதே…
விலகினால்
நான் வீழ்ந்திடுவேன்
என் துணை அல்லவா நீ…
அத்துமீறி நுழைந்தவன்
திருடிச் செல்வான் என நினைத்திருந்தேன்…
தனிமையை திருடுகின்றாய்…
தூக்கத்தில் வந்து
கனவுகளையும் திருடுகின்றாய்…
அடுத்தவர் வெற்றியில் பொறாமைப்பட்டு
மற்றவரை மிதித்து முன்னேறி
குறுக்கு வழியில் சென்று
தகுதிக்கு மீறி ஆசைப்பட்டு
கிடைக்கும் வெற்றி
நிலைப்பது
குறுகிய காலமே…
அவளை பார்த்த நொடி
நின்று வந்தது
உயிர் மூச்சு…!!!
“புத்தி உள்ளவன் பிழைத்துக்கொள்வான்
கருத்துள்ள கதை…
ரஷ்ய ஜெயிலில் மூன்று தூக்குதண்டனைக் கைதிகள் இருந்தனர்.இறக்குமுன் அவர்களின் கடைசி மூன்று ஆசைகள் என்ன என்று கேட்கப்பட்டது.
முதல் கைதியின் ஆசை:நல்ல பெண்,நல்ல மது ,லெனின் சமாதிக்கு அருகில் புதைக்கப்பட வேண்டும்.மூன்று ஆசைகளும் நிறைவேற்றப்பட்டன.
இரண்டாவது கைதியின் ஆசைகள் ;நல்ல பெண்,நல்ல உணவு,ஸ்டாலின் சமாதிக்கருகில் புதைக்கப்பட வேண்டும்.அவனுடைய ஆசைகளும் நிறைவேற்றி வைக்கப்பட்டன.
மூன்றாவது கைதி தனது முதல் ஆசையாக மாம்பழம் கேட்டான்.அப்போது மாம்பழ சீசன் இல்லை.எனவே தூக்கு தண்டனை ஆறு மாதம் ஒத்தி வைக்கப்பட்டது.
ஆறு மாதத்திற்குப்பின் மாம்பழம் வாங்கிக் கொடுத்து இரண்டாவது ஆசையைக் கேட்டனர்.செர்ரிப் பழம் என்று பதில் வந்தது.அப்போது செர்ரிப் பழ சீசன் இல்லை என்பதால் மறுபடியும் தூக்கு தண்டனை ஆறு மாதம் தள்ளி வைக்கப்பட்டு,பின் செர்ரிப்பழம் வாங்கிக் கொடுக்கப்பட்டது.
மூன்றாவது ஆசையாக அவன் சொன்னான்,”என் உடல் தற்போதைய அதிபரின் சமாதிக்கருகில் புதைக்கப்பட வேண்டும்.”அதிகாரிகள் அதிர்ந்துவிட்டனர்,”என்ன சொல்கிறாய்,நீ?அவர் உயிருடன் அல்லவா இருக்கிறார்!” கைதி அமைதியாகச் சொன்னான்,”அவர் இறக்கும் வரை நான் காத்திருக்கிறேன்.””
*****
உன் பார்வையை வீசி
சலனப்படுத்திவிட்டாய்
உள்ளத்தை…
உன்னைத் தீண்ட
கட்டளை அனுப்புகின்றது
விழிகளுக்கு…
அன்றலர்ந்த மலர்போல் வந்து
உள்ளத்தை தழுவிச் சென்றாய்
இன்றோ
விண்ணுலக தேவதைபோல் வந்து
உள்ளத்தில் பதிந்துவிட்டாய்…
“சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் சக்தியை இறைவன் மனிதனுக்கும் தவளைக்கும் ஒரே மாதிரி தான் கொடுத்து இருக்கிறான்.
ஒரு தவளையை பிடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள்,
தண்ணீரின் வெப்பம் அதிகரிக்கும்போது தவளை தன் உடலை அந்த வெப்ப நிலைக்கு ஏற்பமாற்றி கொண்டே வரும்……வெப்பம் ஏற ஏற தவளையும் அந்த வெப்பநிலைக்கு ஏற்ப தன் உடலை அந்த வெப்பத்துக்கு ஏற்ப மாற்றி கொள்ளும்.