அழகாய் பதிந்ததே…

மந்திரத்தால்
கட்டி வைத்தாயோ
உன்னை பார்த்ததும்
அசைய மறுக்கின்றனவே
விழிகள்…
மந்திரத்தால்
கட்டி வைத்தாயோ
உன்னை பார்த்ததும்
அசைய மறுக்கின்றனவே
விழிகள்…
“ஒரு யுத்தத்தில் எதிரி நாட்டு இளவரசனை உயிரோடு பிடித்து இராஜாவின் முன்பு நிறுத்தினர்.
இளவரசன் தன் உயிருக்காகக் கெஞ்சி மன்றாடி தன்னை மன்னிக்கும்படியாக கேட்டுக்கொண்டான்.
அதற்கு ஒரு நிபந்தனை இருக்கிறது என்றார் வெற்றி பெற்ற ராஜா .
Continue reading →உன்னை கண்டதும்
இறக்கை முளைத்து பறக்கின்றது
என் இதயம் மட்டுமல்ல
கடிகார முட்களுமே…!!!
“குடும்பத்திலும் சரி அலுவலத்திலும் சரி உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல் இருக்கவும், ஏற்பட்ட விரிசல்கள் மேலும் பெரிதாகாமல் இருக்க:
* நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.
* அர்த்தமில்லாமலும், பின்விளைவு அறியாமலும் பேசிக்கொண்டிருப்பதை விடுங்கள்.
* எந்த விஷயத்தையும் பிரச்சனையையும் நாசூக்காக கையாளுங்கள், விட்டுக்கொடுங்கள்.
* நீங்கள் சொன்னதே சரி, செய்ததே சரி என்று வாதாடாதீர்கள், குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள்.
* உண்மை எது, பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும், அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள்.
* மற்றவர்களைவிட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வப்படாதீர்கள்.
*அளவுக்கதிகமாய், தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள்.
* எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ, இல்லையோ சொல்லிக்கொண்டிருக்காதீர்கள்.
* கேள்விப்படுகின்ற எல்லா விஷங்களையும் நம்பி விடாதீர்கள்.
* அற்ப விஷயங்களைப் பெரிதுபடுத்தாதீர்கள்.
* உங்கள் கருத்துக்களில் உடும்புப் பிடியாய் இல்லாமல், கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள்.
* மற்றவர் கருத்துக்களில் செயல்களை, நடக்கின்ற நிகழ்ச்சிகளைத் தவறாக புரிந்து கொள்ளாதீர்கள்.
* மற்றவர்களுக்குரிய மரியாதை காட்டவும், இனிய, இதமான சொற்களைப் பயன்படுத்தவும் தவறாதீர்கள்.
* புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாததுபோல் நடந்து கொள்ளாதீர்கள்.
* பேச்சிலும், நடத்தையிலும் பண்பில்லாத வார்த்தைகளையும், தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதை தவிர்த்து அடக்கத்தையும் பண்பையும் காட்டுங்கள்.
* அவ்வப்போது நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.
* பிரச்சினைகள் ஏற்படும்போது அடுத்தவர் முதலில் இறங்கி வரவேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சைத் துவக்க முன் வாருங்கள்.”
*****
குளிரும் நிலவாக
மின்னும் தாரகையாக
தவழும் தென்றலாக
அழகு மலராக
மயக்கும் தேவதையாக
ஆளும் அரசியாக
என்னுள் நீ!!!
தடுமாறச் செய்து
தடம் மாறச் செய்கின்றது
உன்
கடைக்கண் பார்வை…
காலையில் மென்மையாய் அணைத்து
இதம் தருகின்றாய்
மதியம் இறுக அணைத்து
வாடச் செய்கின்றாய்
மாலையில் அணைப்பை தளர்த்தி
மறைந்து போகின்றாய்
மறவாமல் மறுநாள் காலையில்
மீண்டும் வருகின்றாய்…
ஆதவன் வருவதும்
பூமகள் மலர்வதும்
இயற்கை வரைந்த
சட்டம்…
துன்பங்களையும் தோல்விகளையும்
தந்தாலும்
இன்பங்களையும் வெற்றிகளையும்
தர மறக்காத
ஆண்டே!
என்னுள் மூழ்கி
கண்டெடுத்தாய் காதல் முத்து…