“ரொம்ப வயசாகி, சாகப்போகின்ற நேரத்தில் ஒரு சந்நியாசி, தன்னோட சீடர்களுக்கு வாழ்க்கைத் தத்துவம் ஒன்றை புரிய வைக்க நினைத்தார். எல்லோரையும் அழைத்து உட்கார வைத்து, அவர்களுக்கு தன்னுடைய பொக்கை வாயை திறந்து காட்டினார். அவ்வளவுதான், ‘வாழ்க்கைத் தத்துவம் இதுதான்’ என்று சொல்லி போகச் சொல்லிவிட்டார். ஒரே ஒரு சீடனுக்கு மட்டும் ஒன்றுமே புரியவில்லை. வாய்க்குள் அப்படியென்ன வாழ்க்கைத் ததுவம் இருந்திடப்போகிறது என்று குழம்பியவன், மெதுவாக குருவையே எழுப்பிக் கேட்டான். அவர் கேட்டார்.. ‘என் வாய்குள் என்ன இருந்தது?’
‘நாக்கும் உள்நாக்கும் இருந்தது!’
‘பல் இருந்ததா?’
‘இல்லை.’
‘அதுதான் வாழ்க்கை.. வன்மையானது அழியும், மென்மையானது வாழும்.’“