எண்ணக்குவியல்கள் கு6 எ1
குவியல் 6
முகவுரை
எமது வாழ்க்கை சிறப்பாக அமைய கல்வி, செல்வம், வீரம் மூன்றும் அவசியம் என்பது யாவரும் அறிந்ததே. இவை மூன்றும் ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டுள்ளது. நாம் வாழ்வதற்கு தேவையான அத்தியாவசியமான பொருட்களை வாங்குவதற்கு செல்வம் தேவை. செல்வத்தை நேர்வழியில் ஈட்டுவதற்கு கல்வி முக்கியம். ஈட்டிய அச் செல்வத்தையும் எம்மையும் பாதுகாப்பதற்கு வீரம் அத்தியாவசியமாகின்றது. வீரம் எனும்போது அடி, தடி, சண்டைதான் வீரம் என நினைக்கக்கூடாது. துணிவும் சமயோசித புத்தியையும் வீரம் எனக்கொள்வோம்.
இப்பகுதியில் கல்வி, செல்வம், வீரம் என்பன தனித்தனியே எமது வாழ்க்கையில் என்னென்ன பங்கினை வகிக்கின்றன என்பதனைப் பார்ப்போம். குவியல் 6 இல் மூன்று எண்ணங்களைப் பதிவு செய்கின்றேன்.
குவியல் 6 எண்ணம் 1
கல்வி

ஏற்கெனவே குவியல் 2 இல் கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பார்த்துள்ளோம். இங்கு கல்வி எப்படியெல்லாம் எமக்கு உதவுகிறது என்பதனைப் பார்ப்போம்.
Continue reading