எண்ணக்குவியல்கள் கு4 எ2
குவியல் 4 எண்ணம் 2
பேராசை பெருநட்டம்

வாழ்க்கையில் முன்னேறிச் செல்வதற்கு ஆசை இருக்கவேண்டும். ஆசை உந்துசக்தியாக செயற்படுகிறது. ஆசை எமது சக்திக்கும் தகுதிக்கும் உட்பட்டதாக இருக்கவேண்டும். எம்மால் இயலாததற்கு ஆசைப்படக்கூடாது. அது எம்மை தவறான பாதையில் அழைத்துச் சென்று அழிவைத் தந்துவிடும். அத்துடன் அளவுக்கு அதிகமாக பேராசைப்படவும் கூடாது. பேராசை என்பது எமது சக்திக்கும் வருமானத்திற்கும் அப்பாற்பட்டது. எம்மிடம் இருக்கும் செல்வத்தையும் அது அள்ளிச் சென்றுவிடும். ஆசைக்கு ஒரு எல்லை வகுத்தோமெனில் வாழ்க்கை சுமுகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும்.
Continue reading








