தமிழ்க்கீற்று

My Productivity Blog

தமிழ்க்கீற்று
  • Home
  • My Work
    • Articles
    • Poems
      • Spiritual Poems
    • Stories
    • My kitchen
    • Embroidery work gallery
    • Favourites
  • Ennak Kuviyalkal
  • About me
  • Contact

எண்ணக்குவியல்கள்

Archives

January 24, 2025 by Gowry Mohan

எண்ணக்குவியல்கள் கு7 எ2

குவியல் 7                                                                                                                              எண்ணம் 2

சந்தேகம்

சந்தேகம் என்பது புற்றுநோயைப் போன்றது. புற்றுநோய் எவ்வாறு உடலில் பரவி உடலை அரிக்கிறதோ அதேபோல் சந்தேகம் எனும் நோய் மனதில் வேகமாகப் பரவி  மனதை அரித்து நிம்மதியை அழித்துவிடும். எனவே சந்தேகம் என்று ஒன்று வந்துவிட்டால் அதனை ஆராய்ந்து பார்த்தோ, மனம்விட்டுக் கதைத்தோ அல்லது தீர விசாரித்தோ நீக்கிவிடுவதே நல்வாழ்வுக்கு உகந்ததாகும்.

Continue reading →
Posted in எண்ணக்குவியல்கள் ·

Archives

January 6, 2025 by Gowry Mohan

எண்ணக்குவியல்கள் கு7 எ1

குவியல் 7

ஒரு மனிதனின் வாழ்க்கை அவனது எண்ணங்கள் போலவே அமையும் என்பதை பல கட்டுரைகள் மூலம் வாசித்தும் சொற்பொழிவுகள் மூலம் கேட்டும் மட்டுமல்லாது நேரிடையாகவே நாம் உணரக்கூடிய வகையில் பல சம்பவங்களையும் பார்த்திருக்கிறோம். மனிதன் நற்குணங்களை வளர்த்துக்கொள்ளும்போது அவனது செயல்கள் நல்லவைகளாக அமைவதுடன் அவனது வாழ்க்கையும் சிறப்பாக அமையும். தீய குணங்கள் தலைதூக்கும்போது  அவற்றை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டும். தீயவை எவை என்று தெரிந்துகொண்டே அவற்றை செய்வது அவரைச் சுற்றியிருப்பவர்களை மட்டுமல்லாது அவரையே அது அழித்துவிடும் என்பதை மனதில்கொண்டு செயலாற்றுவது நன்று.

பொறாமை, சந்தேகம், தற்பெருமை, சுயநலம், போலித்தனம், போலி ஆவணம் தயாரித்தல், அகந்தை, சோம்பேறித்தனம், பிறர் துன்பத்தில் மகிழ்தல், கெட்டவார்த்தைகள் பேசுதல், கூடாத சேர்க்கை, புறம் பேசுதல், பாரபட்சம் பார்த்தல், கோள் சொல்தல், வாக்கு மீறல், பொய்சாட்சி கூறுதல், கேலி செய்தல், வதந்தி பரப்புதல், ஏமாற்றுதல், கலப்படம் செய்தல், பொய், களவு, பாலியல் கொடுமை,  கொள்ளை, கொலை என தீய குணங்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. உண்மையும் நேர்மையும் கடவுள் நம்பிக்கையும் எம்மை தீய குணங்களிலிருந்து காப்பாற்றிவிடும்.

தீய குணங்கள் எவ்வாறு எம் வாழ்க்கையைப் பாதிக்கின்றன என்பதை இங்கு பார்ப்போம். இப்பகுதியில் ஆறு எண்ணங்களைப் பதிவு செய்கிறேன்.

குவியல் 7                                                                                                                  எண்ணம் 1

பொறாமை

ஒருவரிடம் இருக்கக்கூடாத குணங்களில் ஒன்று பொறாமை. மற்றவரின் வளர்ச்சி, திறமை, முயற்சி, உழைப்பு, வெற்றி, செல்வம், அழகு என்பனவற்றைப் பார்த்து ஏற்படுவது பொறாமை. நாமும் அவரைப் போல இருக்கவேண்டும் அல்லது அவரை விட நன்றாக இருக்கவேண்டும், முன்னேறவேண்டும் என்று நல்லவிதமாக முயற்சி செய்வது, பாடுபடுவது தவறில்லை. ஆனால் அவரின் செயல்கள் யாவும் பலனளிக்கக்கூடாது, அவரிடம் இருப்பவை யாவும் அழிந்துவிடவேண்டும் என்றெல்லாம் நினைத்துக்கூட பார்க்கக்கூடாது. அது மிகவும் தவறான செயலாகும். அந்த நினைவே எமது வளர்ச்சியை தடுத்துவிடும். தகாத செயல்களை செய்யத் தூண்டிவிடும். இறுதியில் எம்மை அழித்தும்விடலாம்.

Continue reading →
Posted in எண்ணக்குவியல்கள் ·

Archives

December 26, 2024 by Gowry Mohan

எண்ணக்குவியல்கள் கு6 எ3

குவியல் 6                                                                                                                   எண்ணம் 3

வீரம்

வீரம் எனும்போது புராண இதிகாசங்களில் கூறப்படும் நாயகர்களின் வீர சாகசங்களைப் பற்றியோ, பண்டைக்கால முடியாட்சி அரசர்களான மகா அலெக்சாண்டர், ராஜ ராஜ சோழன், சூரியவர்மன் போன்றோரின் வீரதீர செயல்கள் பற்றியோ மற்றும் அண்மைக்காலத்தில் மேற்கத்திய நாடுகளின் ஆக்கிரமிப்புக்களை எதிர்த்துப் போராடி வென்ற மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா போன்றோரின் மனம் தளராத தொடர் போராட்டங்களைப் பற்றியோ அலசி ஆராயாமல் சாதாரண மனிதர்களின் தற்கால அன்றாட வாழ்க்கைக்குப் பொருத்தமான விடயங்கள் பற்றி குறிப்பிட விரும்புகிறேன்.

Continue reading →
Posted in எண்ணக்குவியல்கள் ·

Archives

December 16, 2024 by Gowry Mohan

எண்ணக்குவியல்கள் கு6 எ2

குவியல் 6                                                                                                                   எண்ணம் 2

செல்வம்

செல்வம் எனும்போது நாம் இங்கு பணம், சொத்து என்பனவற்றைப் பார்ப்போம். மனிதன் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் வாழ செல்வம் அத்தியாவசியமானதாகும். எமது அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் என்பவற்றை பணம் இன்றி பெறமுடியாது. நேர்மையான முறையில் ஈட்டும் செல்வம் இறுதிவரை எமக்குத் துணையாக வரும். செல்வத்தைப் பெற உழைப்பு முக்கியம். அவரவர்க்கு இயலுமான வழிகளில் பணத்தை சம்பாதிக்கலாம். அரசாங்க வேலைதான் வேண்டும், பெரிய பதவி வரும்வரை வேலை தேடிக்கொண்டே இருப்பேன், என் கல்விக்குத் தகுந்த வேலைக்குத்தான் செல்வேன் என்றெல்லாம் காலத்தைக் கடத்தினால் வாழ்க்கை ஏழ்மை நிலைமையை நோக்கிச் செல்லாம். எனவே விருப்பமான தொழிலுக்கு முயற்சிகளை மேற்கொள்வதுடன் அது கிடைக்கும்வரை சிறு சிறு வேலைகளைச் செய்து உழைப்பதுதான் புத்திசாலித்தனம்.

Continue reading →
Posted in எண்ணக்குவியல்கள் ·

Archives

December 3, 2024 by Gowry Mohan

எண்ணக்குவியல்கள் கு6 எ1

குவியல் 6

முகவுரை

எமது வாழ்க்கை சிறப்பாக அமைய கல்வி, செல்வம், வீரம் மூன்றும் அவசியம் என்பது யாவரும் அறிந்ததே. இவை மூன்றும் ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டுள்ளது. நாம் வாழ்வதற்கு தேவையான அத்தியாவசியமான பொருட்களை வாங்குவதற்கு செல்வம் தேவை. செல்வத்தை நேர்வழியில் ஈட்டுவதற்கு கல்வி முக்கியம். ஈட்டிய அச் செல்வத்தையும் எம்மையும் பாதுகாப்பதற்கு வீரம் அத்தியாவசியமாகின்றது. வீரம் எனும்போது அடி, தடி, சண்டைதான் வீரம் என நினைக்கக்கூடாது. துணிவும் சமயோசித புத்தியையும் வீரம் எனக்கொள்வோம்.

இப்பகுதியில் கல்வி, செல்வம், வீரம் என்பன தனித்தனியே எமது வாழ்க்கையில் என்னென்ன பங்கினை வகிக்கின்றன என்பதனைப் பார்ப்போம். குவியல் 6 இல் மூன்று எண்ணங்களைப் பதிவு செய்கின்றேன்.

குவியல் 6                                                                                                                     எண்ணம் 1

கல்வி

ஏற்கெனவே குவியல் 2 இல் கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பார்த்துள்ளோம். இங்கு கல்வி எப்படியெல்லாம் எமக்கு உதவுகிறது என்பதனைப் பார்ப்போம்.

Continue reading →
Posted in எண்ணக்குவியல்கள் ·

Archives

November 21, 2024 by Gowry Mohan

எண்ணக்குவியல்கள் கு5 எ5

குவியல் 5                                                                                                                   எண்ணம் 5

தோழனோடும் ஏழமை பேசேல்

எக்காலத்திலும் எம் வாழ்க்கையை உயர்த்தும் காரணிகளுள் நேர்மறை எண்ணங்களும் ஒன்றாகும். எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் வறுமை எம்மைப் பீடித்தாலும் மனம் தளராமல், எல்லாம் சில நாட்களில் மாறிவிடும் என்ற எண்ணம் மனதில் பதிந்திருத்தல் வேண்டும். இதுவும் கடந்து போகும் என்ற நினைப்புடன் முயற்சியைக் கைவிடாது பாடுபட வேண்டும். தோல்விகளைக் கண்டு அஞ்சலாகாது. முயற்சிகள் தொடரவேண்டும். முயலும் வழிகளை மாற்றலாம். நேர்வழியாக இருந்துவிட்டால் தாமதமானாலும் நிரந்தரமான வெற்றி நிச்சயம்.

Continue reading →
Posted in எண்ணக்குவியல்கள் ·

Archives

November 13, 2024 by Gowry Mohan

எண்ணக்குவியல்கள் கு5 எ4

குவியல் 5                                                                                                                   எண்ணம் 4

கொற்றவன் அறிதல் உற்றிடத்து உதவி

ஒரு நாட்டில் வாழும் மக்களை ஏழை, மத்தியதர, பணக்கார வர்க்கத்தினர் என பிரித்தறியலாம். இந்த மூன்று வர்க்கத்தினருள்ளும் படித்தவர்களும் இருக்கிறார்கள், படிக்காதவர்களும் இருக்கிறார்கள். அவரவர் திறமைகளுக்கு ஏற்ப உழைக்கும் வழி அமைந்திருக்கும்.

Continue reading →
Posted in எண்ணக்குவியல்கள் ·

Archives

November 2, 2024 by Gowry Mohan

எண்ணக்குவியல்கள் கு5 எ3

குவியல் 5                                                                                                                   எண்ணம் 3

கெடுவது செய்யின் விடுவது கருமம்

பூவுலகில் மனிதன் வாழ்வதற்கு உழைப்பு அவசியம். தனக்கு அத்தியாவசியமான உணவு, உடை, இருப்பிடம் இவற்றைப் பெற்றுக்கொள்ள உழைக்க வேண்டும். அவரவர் அறிவுக்கேற்ப, திறமைக்கேற்ப, விருப்பமான கல்வி, தொழிற்கல்வி கற்று வருமானம் ஈட்டுவதற்கு தயாராகிறார்கள்.

Continue reading →
Posted in எண்ணக்குவியல்கள் ·

Archives

October 21, 2024 by Gowry Mohan

எண்ணக்குவியல்கள் கு5 எ 2

குவியல் 5                                                                                                                  எண்ணம் 2

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை

தவறுகள் செய்வது மனித இயல்பு. தெரிந்தோ தெரியாமலோ செய்யும் தவறுகளை உணர்ந்து திருத்திக்கொள்பவர்களும் இருக்கிறார்கள், தவறு என்று தெரிந்தும் அதை தொடர்ந்து செய்பவர்களும் இருக்கிறார்கள். தாங்கள் செய்யும் தவறுகளை உணராமல் அடுத்தவர்களின் தவறுகளை பார்த்து குறை கூறுவதிலேயே குறியாக இருப்பவர்களும் இருக்கிறார்கள்.

Continue reading →
Posted in எண்ணக்குவியல்கள் ·

Archives

October 12, 2024 by Gowry Mohan

எண்ணக்குவியல்கள் கு5 எ1

குவியல் 5

முகவுரை

​வையகத்தில் எப்படி வாழவேண்டும் என்று எளிய முறையில் கூறும் நீதி நூல்கள் எல்லோர் மனதிலும் பதியப்படவேண்டியவை. இவை கூறும் கருத்துக்களை படித்து அறிவது மட்டுமன்றி வாழ்வில் கடைப்பிடிக்கவும் பழகினோமேயானால் வாழ்க்கை சிறப்பாக அமையும் என்பதில் ஐயமில்லை. ஔவையாரால் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் நீதிநூல்களில் கொன்றைவேந்தனும் ஒன்றாகும்.. நீதியை நிலைநிறுத்தும் கொன்றைவேந்தனில் ஐந்தினை தெரிவுசெய்து இங்கு எனது எண்ணங்களை பதிவுசெய்கிறேன்.

குவயல் 5                                                                                                                      எண்ணம் 1

கிட்டாதாயின் வெட்டென மற

மனம் ஒரு குரங்கு என்று சொல்வர். எப்போதும் அது அங்கே இங்கே என்று அலைந்து திரியும். கடவுளை வணங்கும்போதும் அதை அடக்கி ஒருநிலைப்படுத்திவிட்டால் ஓரிரு நிமிடங்களில் அது மீண்டும் கட்டவிழ்த்து சென்றுவிடும். எந்நேரமும் அலைபாய்ந்துகொண்டிருக்கும் மனதை நம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்பது மிகவும் கடினம்.

Continue reading →
Posted in எண்ணக்குவியல்கள் ·
← Older posts
Newer posts →

Archives

  • July 2026
  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025
  • August 2025
  • July 2025
  • June 2025
  • May 2025
  • April 2025
  • March 2025
  • February 2025
  • January 2025
  • December 2024
  • November 2024
  • October 2024
  • September 2024
  • August 2024
  • July 2024
  • June 2024
  • May 2024
  • April 2024
  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • December 2022
  • November 2022
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022
  • April 2022
  • March 2022
  • February 2022
  • October 2021
  • September 2021
  • June 2021
  • January 2021
  • September 2020
  • May 2020
  • April 2020

Categories

  • எண்ணக்குவியல்கள்
  • கட்டுரைகள்
  • கவிதைகள்
  • சமையலறை
  • சிறுகதைகள்
  • பக்தி கவிதைகள்
  • படித்ததில்பிடித்தது

Recent Posts

  • படித்ததில் பிடித்தது – தொகுப்பு 193
  • வாழ்ந்திடு… மாறிடு…
  • படித்ததில் பிடித்தது – தொகுப்பு 192
  • மின்சார மலர்
  • படித்ததில் பிடித்தது – தொகுப்பு 191
© 2020 Tamilkeetru. All rights reserved