எண்ணக்குவியல்கள் கு2 எ5
குவியல் 2 எண்ணம் 5
சேரிடம் அறிந்து சேர்

மானுடர் ஒவ்வொருவருக்குள்ளும் தேவ குணங்களும் அசுர குணங்களும் உள்ளன. பொய், களவு, சூது, பொறாமை, கோபம், பேராசை, காமம், அகங்காரம், ஆணவம், பிறர் துன்பத்தில் மகிழ்தல், கேலி செய்தல், குறை கூறுதல், கோள் சொல்லுதல், கெட்ட வார்த்தை பிரயோகம் போன்ற தீய குணங்களை அடக்கி செயலிழக்கச் செய்து, நேர்மை, வாய்மை, பொறுமை, அன்பு, பாசம், கனிவு, ஒழுக்கம், பக்தி, முயற்சி, ஈகை, அடக்கம், பணிவு, விட்டுக் கொடுத்தல் போன்ற நல்ல குணங்களை மேலோங்கச் செய்யும் சக்தி எம்மிடம் மட்டுமே உள்ளது. அச் சக்தியை நாம் பயன்படுத்தக் கற்றுக்கொண்டால் எமது வாழ்வு மகிழ்ச்சியான பாதையில் செல்லும் என்பதில் ஐயமில்லை. அடுத்தவர்கள் ஆலோசனை, புத்தி கூறலாம். ஆனால் அதை ஏற்றுக்கொண்டு மாறுவது எம்மால் மட்டுமே முடியும்.
Continue reading








