எண்ணக்குவியல்கள் கு2 எ1
குவியல் 2
மானுடன் சிறப்பாக வாழ்வதற்கும் பிறவிப் பயனை அடைவதற்கும் உடல், உள ஆரோக்கியம் தேவை. மன ஆரோக்கியத்திற்கு நீதி நூல்கள் வழிகாட்டுகின்றன. பாடசாலைகளில் சிறிய வகுப்பிலிருந்தே நீதி நூல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. நீதி நூல்கள் தொடர்பாக பாடசாலை மட்டங்களில் பல மனனப் போட்டிகள் நடாத்தப்பட்டு பரிசில்களும் வழங்கப்படுகின்றன. இந் நடவடிக்கைகள் மூலம் சிறுவர்களுக்கு மட்டுமல்லாது வீட்டிலுள்ள பெரியவர்களுக்கும் நன்னெறிகள் கடத்தப்படுகின்றன. இவற்றை அறிந்துகொள்வதோடு நிறுத்தாமல் செயலிலும் கடைப்பிடித்தால்தான் அதன் பயனை முழுமையாக நாம் அனுபவிக்கலாம்.
நீதி நூல்கள் கூறும் நற்பண்புகளை கடைப்பிடித்து வாழ்வதன் மூலம், நாளைய தலைவர்களான இன்றைய சிறுவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து நற் பிரஜைகளை உருவாக்குவோம்.
அற நெறிகளைக் கூறும் ஔவையார் அருளிய ஆத்திசூடியிலிருந்து ஐந்து அடிகளை தலைப்புக்களாகக் கொண்டு எண்ணங்கள் ஐந்து இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.
குவியல் 2 எண்ணம் 1
அறம் செய விரும்பு

கடவுள் என யாவரும் குறிப்பிட்டு வெவ்வேறு வழிமுறைகளில் வணங்குவது ஒரு மாபெரும் சக்தியையே. எம்முள்ளே இறை சக்தி இருக்கிறது. அச் சக்தியை சரியான முறையில் பயன்படுத்தினால் சிறப்பாக வாழலாம்.
Continue reading