எண்ணக்குவியல்கள் கு1 எ4
குவியல் 1 எண்ணம் 4
காற்று

பஞ்ச பூதங்களில் ஒன்றான காற்று இல்லாமல் மனித வாழ்க்கை இல்லை. காற்றினால் தான் உயிர் உடலுடன் இணைந்திருக்கிறது.
Continue readingகுவியல் 1 எண்ணம் 4
காற்று
பஞ்ச பூதங்களில் ஒன்றான காற்று இல்லாமல் மனித வாழ்க்கை இல்லை. காற்றினால் தான் உயிர் உடலுடன் இணைந்திருக்கிறது.
Continue reading →குவியல் 1 எண்ணம் 3
நெருப்பு
பஞ்சபூதங்களில் ஒன்று நெருப்பு எனும் தீ.
மனித வாழ்வோடு நெருப்பும் பின்னிப் பிணைந்துள்ளது. நாம் உயிரோடிருக்கின்றோம் என்பதை உணர்த்தும் காரணிகளில் ஒன்று சூடு. உடல் அசாதாரண நிலையில் இருக்கும்போது உடலில் வெப்பம் அதிகரிக்கும் அல்லது குறையும். மனித உடலினுள் கனன்று கொண்டிருக்கும் நெருப்பு அதை உணர்த்துகிறது.
Continue reading →குவியல் 1 எண்ணம் 2
நீர்
பஞ்சபூதங்களில் ஒன்று நீர்.
பூமியின் பெரும்பகுதி நீரினால் ஆனது. அந்நீரில் கிட்டதட்ட 1% மான நீர் தான் நமக்கு பயன்படக்கூடிய நல்ல நீர் எனவும் அதிலும் பாதி நீர் பனிக்கட்டிகளாக உறைந்து கிடக்கின்றது எனவும் அறியப்படுகிறது. நல்ல நீரானது மழை மூலம் கிணறு, ஆறு, குளம், நீர் நிலைகள், என்பவற்றில் நிறைந்து கிடைக்கிறது.
Continue reading →வாசித்தவற்றையும் கேட்டவற்றையும் கருத்திற்கொண்டு மனதில் தோன்றிய எண்ணங்களை ஒவ்வொன்றாக இங்கு பதிவு செய்கின்றேன். ஒவ்வொரு குவியலிலும் கிட்டத்தட்ட ஐந்து எண்ணங்கள் பதியப்படும். குவியல்களின் தலைப்புகளுக்கேற்ப எண்ணங்களின் எண்ணிக்கை மாறுபடும். ஒவ்வொரு எண்ணத்திற்கும் ஒரு குட்டிக் கதை உதாரணமாக தந்திருக்கின்றேன். இப் பதிவுகள் வாசிப்பவர்களுக்கு ஆர்வத்துடன் விழிப்புணர்வையும் கொடுக்கும் என நம்புகின்றேன்.
கௌரிமோகன்.
08.05.2024.
குவியல் 1
குவியல் 1 இல் பஞ்சபூதங்கள் எப்படி எமக்கு துணையாக இருக்கின்றன எனவும் அவற்றினால் புவி வாழ் உயிரினங்களுக்கு ஏற்படும் நன்மை தீமைகளையும் மற்றும் மனிதரின் செயல்கள் எவ்வாறு பஞ்சபூதங்களை பாதிப்படையச் செய்கின்றன என்பதையும் குறிப்பிட்டுள்ளேன்.
பஞ்ச பூதங்களினாலான எமது உடலுடன் இணைந்து உயிர் வாழ்வதற்கு பஞ்ச பூதங்களாகிய நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றின் துணை அத்தியாவசியமாகும். இவற்றில் எமக்கு நிலம், நீர், நெருப்பு, காற்று என்பவை தெளிவானவை. ஆகாயத்திற்கு விளக்கம் தேடும்போது, ஆன்மீக ரீதியில் அது ஒரு வெற்றிடம் என அறியப்படுகிறது. விஞ்ஞானத்தில் வெற்றிடம் என்ற சொல் காற்று இல்லாத/காற்று அகற்றப்பட்ட ஓர் இடமாகும். எம்மைப் பொறுத்தவரையில் அதாவது சாதாரண மக்களுக்கு காற்று, நீர்கொண்ட மேகங்கள், பரவும் தீ, புயலோடு அள்ளிச் செல்லும் மணல் இவை யாவும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்துள்ளதே ஆகாயம்.
பண்டைய காலத்தில் இந்துக்கள் இந்த பஞ்ச பூதங்களைத்தான் பயபக்தியுடன் கடவுளாக வணங்கி வந்தார்கள் என நம்பப்படுகிறது. அக்காலகட்டத்தில் மனிதனது நடவடிக்கைகள் இயற்கையை மாசடையச் செய்யாதிருந்தது. இயற்கையும் அவனுக்குத் தேவையானவற்றை வாரி வழங்கியது.
இன்றோ மனிதன் பல நவீன கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்து சொகுசான வாழ்வு வாழ பழகிவிட்டான். புதிய பாவனைப் பொருட்களின் எதிர்மறையான பக்கவிளைவுகளால் இயற்கை மாசடைவதையும் மழை வீழ்ச்சி குறைவடைவதையும் அவன் பொருட்படுத்தவில்லை. புதிய கிருமிகளும் நோய்களும் மக்களை வாட்டத் தொடங்கிவிட்டன. இதிலிருந்து தப்பிக்க மக்கள் மனதில் விழிப்புணர்ச்சி ஏற்படும் வகையில் கருத்தரங்குகளையும் சொற்பொழிவுகளையும் நடாத்த வேண்டும். ஒரு சில மனிதர்களும் சில நிறுவனங்களின் பிரதிநிதிகளும் சிரமதான நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கிவிட்டனர். அரசாங்கமும் பல கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கிவிட்டது. மரங்களை வெட்டுதல், காடுகளை அழித்தல், பிளாஸ்டிக், பொலித்தீன் கழிவுகளை எரித்து நச்சுப்புகை பரப்புதல், வாகனங்களில் புகை கக்குதல், மழை நீர் வடிந்து ஓடும் வாய்க்கால் வழிகளை அடைத்து கட்டிடங்கள் எழுப்புதல் போன்ற செயல்களைப் புரிந்து இயற்கையை சீற்றம் கொள்ளச் செய்யாது அதனுடன் இணைந்து வாழ்ந்தால், இயற்கை எமக்கு துணையாக இருந்து இனிதே வாழ வழிசமைக்கும்.
பஞ்சபூதங்களாகிய நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்பன எவ்வாறு எமது வாழ்க்கையின் பகுதியாக அமைந்துள்ளன என்பதை தனித் தனியாக பார்ப்போம்.
குவியல் 1 எண்ணம் 1
நிலம்
பஞ்ச பூதங்களில் ஒன்று நிலம். நிலத்தை பூமி என்றும் சொல்வர். நிலம் எனும்போது, மனிதனின் வாழ்விடங்களுடன், காடுகளும் பாலைவனங்களும் அடங்கும்.
Continue reading →