இன்றைய சூழலில் பெண்களின் பாதுகாப்பின்மைக்கு யார் காரணம். சமூகமா? அல்லது அரசாங்கமா?
இன்றைய சூழலில் பெண்களின் பாதுகாப்பின்மைக்கு காரணம்
சமூகமே என்பது எனது கருத்தாகும்.
இன்றைய சூழலில் பெண்களின் பாதுகாப்பின்மைக்கு காரணம்
சமூகமே என்பது எனது கருத்தாகும்.
காதல் திருமணமானாலும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமானாலும் இருவருக்குமிடையில் புரிந்துணர்வும் – ஒருவர் மற்றவருடைய மனநிலை, கஷ்டம், துயரம், சுகயீனம் என்பவற்றை உணர்ந்து அதற்கேற்றவாறு நடத்தல் – அகங்காரம், பிடிவாதம் இன்றி விட்டுக்கொடுத்தலும் இருந்தால்தான் மணவாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என்பதே உண்மை.
Continue reading → இணையப் பயன்பாடு நல்ல வழியில் பயன்படுத்துவோருக்கும் அதனால் பயன் பெறுவோருக்கும் வரமாக அமைகிறது.
அதுவே தீய வழிகளில் பயன்படுத்தும்போது பாதிக்கப்படுபவர்களுக்கு சாபமாக அமைகிறது.
இரு உணவு வகைகளிலுமே சத்துக்கள் இருந்தாலும் மருத்துவ குணங்கள் நிறைந்திருப்பது சைவ உணவு வகைகளிலேயே. இலகுவாக சமிபாடடைவதும் அவை தான்.
Continue reading →வெளிநாடுகளில் வாழும் தமிழர், தாங்கள் தமிழர் என்று சொல்வதற்கான அடிப்படை தகுதிகளையே படிப்படியாக இழக்கிறார்கள்.
Continue reading →அரசாங்க வேலையில் இருக்கும் பாதுகாப்பு, உத்தரவாதம், நம்பிக்கை; தனியார் வேலையில் இல்லை. எனவே எல்லோரும் எப்போதுமே அரசாங்க வேலையையே விரும்புவார்கள். ஆனால் அரசாங்க வேலை கிடைப்பது மிகவும் கடினம் என்பதால் தனியார் வேலையை நாடிச் செல்கிறார்கள் என்பதே எனது கருத்து.
Continue reading →ஜாதகம் என்பது உண்மையே என்று எனது கருத்துக்களைத் தருகிறேன்.
பூமியில் பிறந்த சகல ஜீவராசிகளின் கதை, எழுதி முடித்த கதை என்று சொல்வார்கள். அதாவது பிறக்கும்போதே எங்களுக்கு எப்பெப்போ என்னென்ன சந்தோஷங்கள், துன்பங்கள் நடக்கும், முடிவு எப்போ என்பதெல்லாம் குறிக்கப்பட்டுவிட்டது. இதைத்தான் துன்பம் நேரும் சமயங்களில், தலையில் என்ன எழுதியிருக்கோ அதுதான் நடக்கும், என்று சொல்வதைக் கேட்கிறோம். நாமும் சொல்கிறோம். நாம் பிறக்கும் கணத்தில் நவக்கிரகங்களின் நிலை எமது வாழ்க்கையை முன்கூட்டியே எடுத்துக்காட்டுகிறது. அதை துல்லியமாகக் கணிப்பதன் மூலம் உண்மையை உணரலாம். ஒரு பொருளை உற்பத்தி செய்யும்போது அப்பொருளுக்கு விபரக்குறிப்பு தயாரிப்பதுபோல் எமது விபரக்குறிப்பு ஜாதகம்.
Continue reading →எப்போதுமே பிள்ளைகளிடம் பெற்றோர் கனிவோடு கூடிய கண்டிப்புடன் செயற்படுவதே மிகவும் சிறந்த வழிமுறை என்பதே எனது கருத்தாகும். கண்டிப்புடன் செய்யமுடியாத எத்தனையோ காரியங்களை கனிவுடன் கேட்கும்போது அதைத் தட்ட பிள்ளைகளுக்கு மனம்வர மாட்டாது.
Continue reading →ஆண் பெண் இன பாகுபாடு இன்றும் சமூகத்தில் நிலவுகிறது என்பதே எனது கருத்தாகும். இது தவிர்க்க முடியாதது. இருபாலாரும் உடலமைப்பிலிருந்து உணர்வுகள் உட்பட கடமைகள் வரை முற்றிலும் வேறுபட்டிருக்கிறார்கள்.
Continue reading →தனிமனிதன் மற்றும் சமுதாயம்:
* சுத்தம் சுகம் தரும் என்ற அடிப்படை அறிவுக்கேற்ப குப்பை, கழிவுகளை அதற்குரிய இடங்களில் போடுதல் – இதை பார்த்து பிள்ளைகளும் இயல்பாக பழகிவிடுவார்கள். இதையே வீட்டுக்கு வெளியே, பாதை, தெருவில் கடைப்பிடித்தல்.
* பாதை, தெருவில் எச்சில் துப்புவதையும் நிறுத்த வேண்டும்.