
“குழந்தை வளர்ப்பில் நீங்கள் செய்யவேண்டிய முதற்காரியம் என்னவென்றால், பழுதுபட்ட உங்கள் உள்ளங்களின் பாதிப்பு அவர்களுக்கும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதுதான்.”
*****
Continue reading“குழந்தை வளர்ப்பில் நீங்கள் செய்யவேண்டிய முதற்காரியம் என்னவென்றால், பழுதுபட்ட உங்கள் உள்ளங்களின் பாதிப்பு அவர்களுக்கும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதுதான்.”
*****
Continue reading →குவியல் 3 எண்ணம் 5
நாக்கு
ஐம்பொறிகளுள் ஒன்று நா என்றும் அழைக்கப்படும் நாக்கு.
வாய்க்குள் பற்கள் சூழவர அமைந்திருக்கும் நாக்கானது உணவு உண்பதற்கும், நீராகாரம் அருந்துவதற்கும், பேசுவதற்கும் அத்தியாவசியமானதாகும்.
Continue reading →“200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சாளார் ஒரு 500 ரூபாய் நோட்டைக் காட்டி
” யாருக்கு இது பிடிக்கும்?” எனக் கேட்டார்.
கூடியிருந்த அனவரும் தனக்கு பிடிக்குமென கையை தூக்கினர்.
Continue reading →குவியல் 3 எண்ணம் 4
மூக்கு
ஐம்புலன்களில் ஒன்று மூக்கு.
நாம் உயிர் வாழ்வதற்குரிய சுவாசம் மூக்கின் வழியாக நடைபெறுகிறது. மூக்கின் வழியாகவே காற்றை உள்ளெடுத்து வெளிவிடுகின்றோம். இந்நிகழ்வு நடைபெறாவிட்டால் உயிரானது உடலில் தங்காது. சில சமயங்களில் மூக்கடைப்பு போன்ற சுகயீனம் ஏற்படும்போது மூக்கினால் சுவாசிக்க முடியாது போகின்றது. அதனால் வாயினால் சுவாசிக்கின்றோம். அது ஒரு மாற்றுவழியே அன்றி பாதுகாப்பானது அல்ல. மூக்கின் வழியே காற்று உட்செல்லும்போது காற்றிலுள்ள தூசுகள் வடிகட்டி அனுப்பப்படுகின்றன. அத்துடன் வாயினால் சுவாசிக்கும்போது எமக்குத் தேவையான பிராணவாயு கிடைப்பதில்லை எனவும் மூக்கினால் சுவாசிக்கும் போது பிராணவாயு குறையாது எனவும் அறியப்படுகிறது. ஆகையால் மூக்குவழி சுவாசமே பாதுகாப்பானது.
Continue reading →“இன்றைய மனிதர்களில் அதிகம் பேர் ஏதாவது ஒரு கவலையுடன்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சிறு தடையையும் பெரிதாக எண்ணி கவலைப் படுகிறார்கள். இதற்கெல்லாம் காரணம் அவர்கள் மேல் அவர்களுக்கு நம்பிக்கை இல்லாததுதான்.
Continue reading →குவியல் 3 எண்ணம் 3
தோல்
எமது உடலைச் சுற்றி பாதுகாப்பு கவசமாக அமைந்திருக்கும் தோல் ஐம்பொறிகளுள் ஒன்றாகும்.
வெப்பம், குளிர், காற்று போன்ற காலநிலைகளையும், அடிபடும்போது வலியையும், தொடுகையையும் தொடுவதில் உள்ள வேறுபாட்டையும் உணரச் செய்து தோல் எம்மை எச்சரிக்கின்றது. உடலிலுள்ள கழிவுகள் சில வியர்வையாக தோல் மூலம் வெளியேற்றப்படுகின்றன.
Continue reading →கடன் தொல்லையால் அவதிப்பட்ட ஒருவன் மனைவி மற்றும் நான்கு குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தான்.
தூக்குக்கயிறு, விஷம், துப்பாக்கி, கத்தி போன்றவற்றை முன்னே வைத்துவிட்டு எதை வைத்து உயிரைப் போக்கிக் கொள்வது என்று குழப்பத்தில் இருந்தவனைப் பார்த்து கடைசி பையன் கேட்டான்.
“அப்பா சாவதற்கே இத்தனை வழி இருக்கும்போது பிழைப்பதற்கு ஒரு வழி இருக்காதா?”
வாழ நினைப்பவனுக்கு புல்லும் ஆயுதம்!!!
*****
“உலகிலேயே மிகச் சிறிய ஆறு, கண்ணீர்.
அதைக் கடந்து கரையேறியவர்களை விட,
மூழ்கித் தொலைந்தவர்களே அதிகம்.”
*****
“தன்னிடத்தில் ஒன்றை இழுத்துக்கொள்ளும் சக்தியைப் போல அதை விலக்கும் சக்தியும் நம்மிடம் உள்ளது.”
*****
“தாயும் தந்தையும் மகிழ்ச்சி அடைந்தார்களேயானால், கடவுளும் மகிழ்ச்சி அடைவார்.”
*****
“தன்னலத்தை ஒழிப்பதில் தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது. உன்னைத்தவிர யாராலும் உன்னை மகிழ்விக்க முடியாது.”
*****
“உனக்குப் பிடித்ததை நீ கடைப்பிடி.
அதுபோலவே மற்றவர்கள் தங்களுக்கு விருப்பமானவற்றை பின்பற்ற விடு.”
*****