
என்னுள் மூழ்கி
கண்டெடுத்தாய் காதல் முத்து…
குவியல் 6 எண்ணம் 3
வீரம்

வீரம் எனும்போது புராண இதிகாசங்களில் கூறப்படும் நாயகர்களின் வீர சாகசங்களைப் பற்றியோ, பண்டைக்கால முடியாட்சி அரசர்களான மகா அலெக்சாண்டர், ராஜ ராஜ சோழன், சூரியவர்மன் போன்றோரின் வீரதீர செயல்கள் பற்றியோ மற்றும் அண்மைக்காலத்தில் மேற்கத்திய நாடுகளின் ஆக்கிரமிப்புக்களை எதிர்த்துப் போராடி வென்ற மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா போன்றோரின் மனம் தளராத தொடர் போராட்டங்களைப் பற்றியோ அலசி ஆராயாமல் சாதாரண மனிதர்களின் தற்கால அன்றாட வாழ்க்கைக்குப் பொருத்தமான விடயங்கள் பற்றி குறிப்பிட விரும்புகிறேன்.
Continue reading →
“படித்தவர் எல்லோரும் அறிவாளிகளும் அல்ல.
படிக்காதோர் எல்லோரும் முட்டாள்களுமல்ல.”
*****
Continue reading →குவியல் 6 எண்ணம் 2
செல்வம்

செல்வம் எனும்போது நாம் இங்கு பணம், சொத்து என்பனவற்றைப் பார்ப்போம். மனிதன் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் வாழ செல்வம் அத்தியாவசியமானதாகும். எமது அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் என்பவற்றை பணம் இன்றி பெறமுடியாது. நேர்மையான முறையில் ஈட்டும் செல்வம் இறுதிவரை எமக்குத் துணையாக வரும். செல்வத்தைப் பெற உழைப்பு முக்கியம். அவரவர்க்கு இயலுமான வழிகளில் பணத்தை சம்பாதிக்கலாம். அரசாங்க வேலைதான் வேண்டும், பெரிய பதவி வரும்வரை வேலை தேடிக்கொண்டே இருப்பேன், என் கல்விக்குத் தகுந்த வேலைக்குத்தான் செல்வேன் என்றெல்லாம் காலத்தைக் கடத்தினால் வாழ்க்கை ஏழ்மை நிலைமையை நோக்கிச் செல்லாம். எனவே விருப்பமான தொழிலுக்கு முயற்சிகளை மேற்கொள்வதுடன் அது கிடைக்கும்வரை சிறு சிறு வேலைகளைச் செய்து உழைப்பதுதான் புத்திசாலித்தனம்.
Continue reading →
“நாட்டை ஆளும் அரசன் ஒருவனிடத்தில், அந்த நாட்டின் சிற்பி நான்கு பொம்மைகளை கொண்டு வந்து தருகிறார்.
அரசன் கோபமாக ” நான் என்ன சின்னக் குழந்தையா? ” இதை வைத்து விளையாடுவதற்கு என்றுக் கேட்கிறார்.
Continue reading →குவியல் 6
முகவுரை
எமது வாழ்க்கை சிறப்பாக அமைய கல்வி, செல்வம், வீரம் மூன்றும் அவசியம் என்பது யாவரும் அறிந்ததே. இவை மூன்றும் ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டுள்ளது. நாம் வாழ்வதற்கு தேவையான அத்தியாவசியமான பொருட்களை வாங்குவதற்கு செல்வம் தேவை. செல்வத்தை நேர்வழியில் ஈட்டுவதற்கு கல்வி முக்கியம். ஈட்டிய அச் செல்வத்தையும் எம்மையும் பாதுகாப்பதற்கு வீரம் அத்தியாவசியமாகின்றது. வீரம் எனும்போது அடி, தடி, சண்டைதான் வீரம் என நினைக்கக்கூடாது. துணிவும் சமயோசித புத்தியையும் வீரம் எனக்கொள்வோம்.
இப்பகுதியில் கல்வி, செல்வம், வீரம் என்பன தனித்தனியே எமது வாழ்க்கையில் என்னென்ன பங்கினை வகிக்கின்றன என்பதனைப் பார்ப்போம். குவியல் 6 இல் மூன்று எண்ணங்களைப் பதிவு செய்கின்றேன்.
குவியல் 6 எண்ணம் 1
கல்வி

ஏற்கெனவே குவியல் 2 இல் கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பார்த்துள்ளோம். இங்கு கல்வி எப்படியெல்லாம் எமக்கு உதவுகிறது என்பதனைப் பார்ப்போம்.
Continue reading →
“உனக்கு நீ நல்லவனாய் இருந்தால் போதும்.
மற்றவருக்கு நீ கெட்டவனாய் தெரிந்தால் உன் குற்றமில்லை.
கண்ணில் பிழை என்றால் பிம்பமும் பிழையே.
அது பார்க்கப்படுபவன் பிழை அல்ல, பார்ப்பவன் பிழை.”
*****
Continue reading →