
உன்னை கண்டதும்
இறக்கை முளைத்து பறக்கின்றது
என் இதயம் மட்டுமல்ல
கடிகார முட்களுமே…!!!

“குடும்பத்திலும் சரி அலுவலத்திலும் சரி உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல் இருக்கவும், ஏற்பட்ட விரிசல்கள் மேலும் பெரிதாகாமல் இருக்க:
* நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.
* அர்த்தமில்லாமலும், பின்விளைவு அறியாமலும் பேசிக்கொண்டிருப்பதை விடுங்கள்.
* எந்த விஷயத்தையும் பிரச்சனையையும் நாசூக்காக கையாளுங்கள், விட்டுக்கொடுங்கள்.
* நீங்கள் சொன்னதே சரி, செய்ததே சரி என்று வாதாடாதீர்கள், குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள்.
* உண்மை எது, பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும், அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள்.
* மற்றவர்களைவிட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வப்படாதீர்கள்.
*அளவுக்கதிகமாய், தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள்.
* எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ, இல்லையோ சொல்லிக்கொண்டிருக்காதீர்கள்.
* கேள்விப்படுகின்ற எல்லா விஷங்களையும் நம்பி விடாதீர்கள்.
* அற்ப விஷயங்களைப் பெரிதுபடுத்தாதீர்கள்.
* உங்கள் கருத்துக்களில் உடும்புப் பிடியாய் இல்லாமல், கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள்.
* மற்றவர் கருத்துக்களில் செயல்களை, நடக்கின்ற நிகழ்ச்சிகளைத் தவறாக புரிந்து கொள்ளாதீர்கள்.
* மற்றவர்களுக்குரிய மரியாதை காட்டவும், இனிய, இதமான சொற்களைப் பயன்படுத்தவும் தவறாதீர்கள்.
* புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாததுபோல் நடந்து கொள்ளாதீர்கள்.
* பேச்சிலும், நடத்தையிலும் பண்பில்லாத வார்த்தைகளையும், தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதை தவிர்த்து அடக்கத்தையும் பண்பையும் காட்டுங்கள்.
* அவ்வப்போது நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.
* பிரச்சினைகள் ஏற்படும்போது அடுத்தவர் முதலில் இறங்கி வரவேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சைத் துவக்க முன் வாருங்கள்.”
*****

இந்து சமுத்திரத்தின் முத்து என அழைக்கப்படும் மிக அழகிய தீவு இலங்கை ஆகும்.
வணிகத்திற்கு புகழ் பெற்ற இலங்கைத்தீவை போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் கைப்பற்றி இறுதியில் ஆங்கிலேயர் கைப்பற்றி அதன் வளங்களையும் மக்களையும் அடிமைப்படுத்தினர்.
Continue reading →
உயிர் காக்கும் தந்திரம்!
நரி பூனையிடம் தற்பெருமை பேசிக்கொண்டது. “எனக்கு பகைவர்களிடமிருந்து தப்பிக்க நூறு தந்திரங்கள் தெரியும். உனக்கு?”
“எனக்கு ஒரே ஒரு தந்திரம் தான் தெரியும்.” என்றது பூனை.
அப்போது பெரிசாக சப்தம் கேட்டது. ஒநாய்களும், வேடர்களும் துரத்தி வரும் இரைச்சல் கேட்டது. பூனை லபக்கென்று மரத்தில் பாய்ந்து உச்சாணியில் ஏறிக்கொண்டது.
நரிக்கு தன் நூறு தந்திரங்களில் எந்தத் தந்திரத்தைப் பயன் படுத்துவது என்ற யோசனையில் காலதாமதமாகி மாட்டிக்கொண்டு உயிர் துறந்தது.
நீதி : சந்தேகத்துக்குரிய நூறு வழிகளைவிட பத்திரமான ஒரு வழியே மேல்.
*****
Continue reading →
குளிரும் நிலவாக
மின்னும் தாரகையாக
தவழும் தென்றலாக
அழகு மலராக
மயக்கும் தேவதையாக
ஆளும் அரசியாக
என்னுள் நீ!!!

“வாழ்வின் இசை என்பதே பெண்களின் சிரிப்பில்தான் புதைந்து கிடக்கிறது.
பெண்கள் மகிழ்ச்சியோடு இருப்பதில்தான் ஒட்டுமொத்த குடும்பத்தின் மகிழ்ச்சியே அடங்கியிருக்கிறது.”
*****
“நம்பிக்கை எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் தன்னம்பிக்கையை காப்பாற்றுவது.”
*****
Continue reading →
முன்னோரின் அனுபவக் குறிப்புக்கள் பழமொழிகளாகும்.
பழமொழியை முதுமொழி என்றும் சொல்வர்.
Continue reading →குவியல் 7 எண்ணம் 6
வாக்கு மீறல்

எதற்காவது நாம் ஒருவருக்கு வாக்குக் கொடுத்துவிட்டால் அதை மீறுதல் கூடாது. அவர் பெரியவராக இருந்தாலும் சிறு பிள்ளையாக இருந்தாலும் அச்செயல் அவர்கள் மனதை நோகச் செய்துவிடும். எம்மீது அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கையை இழந்துவிடுவோம். வாக்குறுதி கொடுக்குமுன் அதை செயற்படுத்த முடியுமா எனச் சிந்தித்துப் பார்த்தல் அவசியமாகும். எம்மால் முடியாத விஷயங்களுக்கு வாக்குக் கொடுக்கக் கூடாது. அவசிய தேவைக்காக சிந்தித்துப் பாராது, பிறகு பார்த்துக் கொள்ளலாம் என வாக்குக் கொடுத்து காரியத்தை முடிப்பது பெரும் தவறான செயலாகும். சிலவேளைகளில் அந்த வாக்கை நிறைவேற்றமுடியாது போக வாய்ப்புண்டு. இது அடுத்தவரை ஏமாற்றும் செயலாகும்.
Continue reading →
“இரக்கப்படுபவன் ஏமாந்து போகலாம், ஆனால் தாழ்ந்து போவதில்லை.
ஏமாற்றுபவர்கள் வெற்றி பெறலாம், ஆனால் கடைசிவரை சாதிப்பதில்லை.”
*****
“நாக்கு ஒரு தீ.
ஆக்கவும் அழிக்கவும் வல்லது.
கவனமாகப் பயன்படுத்துங்கள்.”
*****
Continue reading →