
“புன்னகை செய்வதற்கு மட்டுமே உங்கள் இதழ்களை பயன்படுத்துங்கள்.
மற்றவர்கள் மனம் புண்படுவதற்கு பயன்படுத்தாதீர்கள்.”
*****
“வீழ்வது அவமானம் அல்ல.
வீழ்ந்தே கிடப்பதுதான் அவமானம்.”
*****
Continue reading

“புன்னகை செய்வதற்கு மட்டுமே உங்கள் இதழ்களை பயன்படுத்துங்கள்.
மற்றவர்கள் மனம் புண்படுவதற்கு பயன்படுத்தாதீர்கள்.”
*****
“வீழ்வது அவமானம் அல்ல.
வீழ்ந்தே கிடப்பதுதான் அவமானம்.”
*****
Continue reading →குவியல் 7 எண்ணம் 3
சுயநலம்

சுயநலம் என்பது தன்னை மட்டுமே கருத்திற்கொண்டு செயல்களைப் புரிவதும் சிந்திப்பதும் பேசுவதுமாகும். மற்றவர்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை, தான் சந்தோஷமாகவும் ஆரோக்கியமாகவும் இருத்தல் முக்கியம் என்ற மனநிலையில் செயற்படுவது, உணவு, உடை, பொருட்கள் என்பவற்றை தானே முதலில் தெரிவுசெய்வது, அடுத்தவர்களின் கஷ்டங்களை உணர்வுகளை தெரிந்து கொண்டும் அவர்களைக் கொண்டு வேலை செய்விப்பது, தனது தேவைகளை திருப்தியாகப் பூர்த்தி செய்து மற்றவர்களின் தேவைகளைப்பற்றி அக்கறை இல்லாமல் இருப்பது என்பவை சுயநலமாக நடத்தல் ஆகும். ஒருவரது சுயநலம் மற்றவர்களைப் பாதிக்கும் வண்ணம் இருப்பது மிகவும் தவறாகும். பெருமைக்காகவும் புகழுக்காகவும் சேவை செய்பவர்களும் சுயநலவாதிகளே.
Continue reading →
“நீங்கள் அனுபவிக்கும் எதுவுமே வாழ்க்கைதான்.
மரணம் என்பதும் கூட வாழ்க்கைதான்.
ஆனால் அது உங்கள் வாழ்க்கையின் கடைசி விநாடியில் வருகிறது, அவ்வளவுதான்.”
*****
Continue reading →குவியல் 7 எண்ணம் 2
சந்தேகம்

சந்தேகம் என்பது புற்றுநோயைப் போன்றது. புற்றுநோய் எவ்வாறு உடலில் பரவி உடலை அரிக்கிறதோ அதேபோல் சந்தேகம் எனும் நோய் மனதில் வேகமாகப் பரவி மனதை அரித்து நிம்மதியை அழித்துவிடும். எனவே சந்தேகம் என்று ஒன்று வந்துவிட்டால் அதனை ஆராய்ந்து பார்த்தோ, மனம்விட்டுக் கதைத்தோ அல்லது தீர விசாரித்தோ நீக்கிவிடுவதே நல்வாழ்வுக்கு உகந்ததாகும்.
Continue reading →
“உங்கள் பாதையை நீங்களே தேர்ந்தெடுங்கள்
ஏன் என்றால் வேறு எவராலும்
உங்கள் கால்களை
கொண்டு நடக்க முடியாது.”
*****
Continue reading →
நம் எண்ணங்களை தெரிவிக்கவும் பிறரது எண்ணங்களை தெரிந்துகொள்ளவும் மொழி உதவுகிறது.
ஆதிகால மனிதனின் அற்புத மொழியாக தமிழ்மொழி திகழ்கிறது.
Continue reading →குவியல் 7
ஒரு மனிதனின் வாழ்க்கை அவனது எண்ணங்கள் போலவே அமையும் என்பதை பல கட்டுரைகள் மூலம் வாசித்தும் சொற்பொழிவுகள் மூலம் கேட்டும் மட்டுமல்லாது நேரிடையாகவே நாம் உணரக்கூடிய வகையில் பல சம்பவங்களையும் பார்த்திருக்கிறோம். மனிதன் நற்குணங்களை வளர்த்துக்கொள்ளும்போது அவனது செயல்கள் நல்லவைகளாக அமைவதுடன் அவனது வாழ்க்கையும் சிறப்பாக அமையும். தீய குணங்கள் தலைதூக்கும்போது அவற்றை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டும். தீயவை எவை என்று தெரிந்துகொண்டே அவற்றை செய்வது அவரைச் சுற்றியிருப்பவர்களை மட்டுமல்லாது அவரையே அது அழித்துவிடும் என்பதை மனதில்கொண்டு செயலாற்றுவது நன்று.
பொறாமை, சந்தேகம், தற்பெருமை, சுயநலம், போலித்தனம், போலி ஆவணம் தயாரித்தல், அகந்தை, சோம்பேறித்தனம், பிறர் துன்பத்தில் மகிழ்தல், கெட்டவார்த்தைகள் பேசுதல், கூடாத சேர்க்கை, புறம் பேசுதல், பாரபட்சம் பார்த்தல், கோள் சொல்தல், வாக்கு மீறல், பொய்சாட்சி கூறுதல், கேலி செய்தல், வதந்தி பரப்புதல், ஏமாற்றுதல், கலப்படம் செய்தல், பொய், களவு, பாலியல் கொடுமை, கொள்ளை, கொலை என தீய குணங்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. உண்மையும் நேர்மையும் கடவுள் நம்பிக்கையும் எம்மை தீய குணங்களிலிருந்து காப்பாற்றிவிடும்.
தீய குணங்கள் எவ்வாறு எம் வாழ்க்கையைப் பாதிக்கின்றன என்பதை இங்கு பார்ப்போம். இப்பகுதியில் ஆறு எண்ணங்களைப் பதிவு செய்கிறேன்.
குவியல் 7 எண்ணம் 1
பொறாமை

ஒருவரிடம் இருக்கக்கூடாத குணங்களில் ஒன்று பொறாமை. மற்றவரின் வளர்ச்சி, திறமை, முயற்சி, உழைப்பு, வெற்றி, செல்வம், அழகு என்பனவற்றைப் பார்த்து ஏற்படுவது பொறாமை. நாமும் அவரைப் போல இருக்கவேண்டும் அல்லது அவரை விட நன்றாக இருக்கவேண்டும், முன்னேறவேண்டும் என்று நல்லவிதமாக முயற்சி செய்வது, பாடுபடுவது தவறில்லை. ஆனால் அவரின் செயல்கள் யாவும் பலனளிக்கக்கூடாது, அவரிடம் இருப்பவை யாவும் அழிந்துவிடவேண்டும் என்றெல்லாம் நினைத்துக்கூட பார்க்கக்கூடாது. அது மிகவும் தவறான செயலாகும். அந்த நினைவே எமது வளர்ச்சியை தடுத்துவிடும். தகாத செயல்களை செய்யத் தூண்டிவிடும். இறுதியில் எம்மை அழித்தும்விடலாம்.
Continue reading →
“உலகில் செய்த தர்மம் ஒன்றே என்றென்றும் அழிவில்லாமல் இருக்கும்.
பொன், பொருள் போன்ற செல்வம் நம் கண் முன்னே காணாமல் போய் விடும்.”
*****
Continue reading →