எண்ணக்குவியல்கள் கு4 எ1
குவியல் 4
முகவுரை
மிக முக்கியமான பயனுள்ள கருத்துக்களை பாமர மக்களும் புரியும் வண்ணம் ஒரு வரியில் புதைத்து வைத்திருக்கின்றார்கள் எமது முன்னோர்கள். அவையே முதுமொழிகள் என்றும் அழைக்கப்படும் பழமொழிகள் ஆகும். அவர்களின் அறிவும் புலமையும் எம்மை வியக்கவைக்கின்றன. இன்றும் வீட்டிலுள்ள பெரியவர்கள் அறிவுரையோ புத்திமதியோ கூறும்போது பழமொழிகளை உபயோகப்படுத்துவதைக் கண்கூடாகக் காணலாம். அவையே அடுத்தடுத்த தலைமுறையினருக்கும் தங்கள் பிள்ளைகளை வழிநடத்த மிகவும் உறுதுணையாக இருக்கும் என்பதை மறுக்கமுடியாது.
முன்னோர்களின் அனுபவக்குறிப்புக்களான பழமொழிகளில் ஐந்தினை தெரிவுசெய்து இங்கு எனது எண்ணங்களை பதிவுசெய்கின்றேன்.
குவியல் 4 எண்ணம் 1
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

எமது உள்ளத்தில் ஏற்படும் எல்லா உணர்ச்சிகளையும் வெளியுலகிற்குக் காட்டிக்கொடுத்துவிடும் எமது முகம். உள்ளத்தை யாராலும் பார்க்க முடியாது. அனால் அதைக் காட்டும் கண்ணாடியாக முகம் தொழிற்படுகின்றது. எமது முகத்தில் ஏற்படும் மாற்றங்கள் நாம் என்ன மனநிலையில் இருக்கின்றோம் என்பதை அப்பட்டமாக கூறிவிடும்.
Continue reading