எண்ணக்குவியல்கள் கு3 எ4
குவியல் 3 எண்ணம் 4
மூக்கு

ஐம்புலன்களில் ஒன்று மூக்கு.
நாம் உயிர் வாழ்வதற்குரிய சுவாசம் மூக்கின் வழியாக நடைபெறுகிறது. மூக்கின் வழியாகவே காற்றை உள்ளெடுத்து வெளிவிடுகின்றோம். இந்நிகழ்வு நடைபெறாவிட்டால் உயிரானது உடலில் தங்காது. சில சமயங்களில் மூக்கடைப்பு போன்ற சுகயீனம் ஏற்படும்போது மூக்கினால் சுவாசிக்க முடியாது போகின்றது. அதனால் வாயினால் சுவாசிக்கின்றோம். அது ஒரு மாற்றுவழியே அன்றி பாதுகாப்பானது அல்ல. மூக்கின் வழியே காற்று உட்செல்லும்போது காற்றிலுள்ள தூசுகள் வடிகட்டி அனுப்பப்படுகின்றன. அத்துடன் வாயினால் சுவாசிக்கும்போது எமக்குத் தேவையான பிராணவாயு கிடைப்பதில்லை எனவும் மூக்கினால் சுவாசிக்கும் போது பிராணவாயு குறையாது எனவும் அறியப்படுகிறது. ஆகையால் மூக்குவழி சுவாசமே பாதுகாப்பானது.
Continue reading