தமிழ்க்கீற்று

My Productivity Blog

தமிழ்க்கீற்று
  • Home
  • My Work
    • Articles
    • Poems
      • Spiritual Poems
    • Stories
    • My kitchen
    • Embroidery work gallery
    • Favourites
  • Ennak Kuviyalkal
  • About me
  • Contact

எண்ணக்குவியல்கள்

Archives

August 25, 2024 by Gowry Mohan

எண்ணக்குவியல்கள் கு4 எ1

குவியல் 4

முகவுரை

மிக முக்கியமான பயனுள்ள கருத்துக்களை பாமர மக்களும் புரியும் வண்ணம் ஒரு வரியில் புதைத்து வைத்திருக்கின்றார்கள் எமது முன்னோர்கள். அவையே முதுமொழிகள் என்றும் அழைக்கப்படும் பழமொழிகள் ஆகும். அவர்களின் அறிவும் புலமையும் எம்மை வியக்கவைக்கின்றன. இன்றும் வீட்டிலுள்ள பெரியவர்கள் அறிவுரையோ புத்திமதியோ கூறும்போது பழமொழிகளை உபயோகப்படுத்துவதைக் கண்கூடாகக் காணலாம். அவையே அடுத்தடுத்த தலைமுறையினருக்கும் தங்கள் பிள்ளைகளை வழிநடத்த மிகவும் உறுதுணையாக இருக்கும் என்பதை மறுக்கமுடியாது.

முன்னோர்களின் அனுபவக்குறிப்புக்களான பழமொழிகளில் ஐந்தினை தெரிவுசெய்து இங்கு எனது எண்ணங்களை பதிவுசெய்கின்றேன்.

குவியல் 4                                                                                                              எண்ணம் 1

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

எமது உள்ளத்தில் ஏற்படும் எல்லா உணர்ச்சிகளையும் வெளியுலகிற்குக் காட்டிக்கொடுத்துவிடும் எமது முகம்.  உள்ளத்தை யாராலும் பார்க்க முடியாது. அனால் அதைக் காட்டும் கண்ணாடியாக முகம் தொழிற்படுகின்றது. எமது முகத்தில் ஏற்படும் மாற்றங்கள் நாம் என்ன மனநிலையில் இருக்கின்றோம் என்பதை அப்பட்டமாக கூறிவிடும்.

Continue reading →
Posted in எண்ணக்குவியல்கள் ·

Archives

August 18, 2024 by Gowry Mohan

எண்ணக்குவியல்கள் கு3 எ5

குவியல் 3                                                                                                                     எண்ணம் 5

நாக்கு

ஐம்பொறிகளுள் ஒன்று நா என்றும் அழைக்கப்படும் நாக்கு.

வாய்க்குள் பற்கள் சூழவர அமைந்திருக்கும் நாக்கானது உணவு உண்பதற்கும், நீராகாரம் அருந்துவதற்கும், பேசுவதற்கும் அத்தியாவசியமானதாகும்.

Continue reading →
Posted in எண்ணக்குவியல்கள் ·

Archives

August 11, 2024 by Gowry Mohan

எண்ணக்குவியல்கள் கு3 எ4

குவியல் 3                                                                                                                    எண்ணம் 4

மூக்கு

ஐம்புலன்களில் ஒன்று மூக்கு.

நாம் உயிர் வாழ்வதற்குரிய சுவாசம் மூக்கின் வழியாக நடைபெறுகிறது. மூக்கின் வழியாகவே காற்றை உள்ளெடுத்து வெளிவிடுகின்றோம். இந்நிகழ்வு நடைபெறாவிட்டால் உயிரானது உடலில் தங்காது. சில சமயங்களில் மூக்கடைப்பு போன்ற சுகயீனம் ஏற்படும்போது மூக்கினால் சுவாசிக்க முடியாது போகின்றது. அதனால் வாயினால் சுவாசிக்கின்றோம். அது ஒரு மாற்றுவழியே அன்றி பாதுகாப்பானது அல்ல. மூக்கின் வழியே காற்று உட்செல்லும்போது காற்றிலுள்ள தூசுகள்  வடிகட்டி அனுப்பப்படுகின்றன. அத்துடன் வாயினால் சுவாசிக்கும்போது எமக்குத் தேவையான பிராணவாயு கிடைப்பதில்லை எனவும் மூக்கினால் சுவாசிக்கும் போது பிராணவாயு குறையாது எனவும் அறியப்படுகிறது. ஆகையால் மூக்குவழி சுவாசமே பாதுகாப்பானது.

Continue reading →
Posted in எண்ணக்குவியல்கள் ·

Archives

August 4, 2024 by Gowry Mohan

எண்ணக்குவியல்கள் கு3 எ3

குவியல் 3 எண்ணம் 3

தோல்

எமது உடலைச் சுற்றி பாதுகாப்பு கவசமாக அமைந்திருக்கும் தோல் ஐம்பொறிகளுள் ஒன்றாகும்.

வெப்பம், குளிர், காற்று போன்ற காலநிலைகளையும், அடிபடும்போது வலியையும்,  தொடுகையையும் தொடுவதில் உள்ள வேறுபாட்டையும் உணரச் செய்து  தோல் எம்மை எச்சரிக்கின்றது. உடலிலுள்ள கழிவுகள் சில வியர்வையாக தோல் மூலம் வெளியேற்றப்படுகின்றன.

Continue reading →
Posted in எண்ணக்குவியல்கள் ·

Archives

July 28, 2024 by Gowry Mohan

எண்ணக்குவியல்கள் கு3 எ2

குவியல் 3                                                                                                                       எண்ணம் 2

காது

ஐம்புலன்களில் ஒன்று செவி என்றும் அழைக்கப்படும் காது.

காதுகள் இரு முக்கிய வழிகளில் எமக்கு உதவுகின்றன. ஒன்று கேட்டல் மற்றையது நாம் நிமிர்ந்து நேராக நிற்பதற்கு எமது உடலின் சமநிலையைப் பேணுதல்.

எமது உறுப்புக்களில் காதின் முக்கியத்துவத்தை பார்ப்போம்.

Continue reading →
Posted in எண்ணக்குவியல்கள் ·

Archives

July 20, 2024 by Gowry Mohan

எண்ணக்குவியல்கள் கு3 எ1

குவியல் 3

ஐம்பொறிகள்

கண், காது, மூக்கு, நாக்கு, தோல் என்பவை ஐம்பொறிகள் ஆகும். ஐம்பொறிகள் மூலம் பெறப்படும் உணர்வுகளாகிய பார்த்தல், கேட்டல், சுவைத்தல், மணத்தல், உணர்தல் என்பவை ஐம்புலன்கள் எனக் கூறப்படுகிறது. ஐம்பொறிகளின் பயன்கள், அவை எவ்வாறு பாதிக்கப்படுகின்றன, அவற்றை பாதுகாப்பது எப்படி போன்ற விடயங்களை இங்கு பார்ப்போம்.

குவியல் 3                                                                                                                       எண்ணம் 1

கண்

ஐம்புலன்களில் ஒன்று கண்.

பார்வையைக் கொடுக்கும் கண்கள் எவ்வளவு முக்கியமானவை என்பதையும் எதனால் கண்கள் பாதிப்படைகின்றன என்பதனையும் அவற்றை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பதையும் இங்கு பார்ப்போம்.

Continue reading →
Posted in எண்ணக்குவியல்கள் ·

Archives

July 13, 2024 by Gowry Mohan

எண்ணக்குவியல்கள் கு2 எ5

குவியல் 2                                                                                                                     எண்ணம் 5

சேரிடம் அறிந்து சேர்

மானுடர் ஒவ்வொருவருக்குள்ளும் தேவ குணங்களும் அசுர குணங்களும் உள்ளன. பொய், களவு, சூது, பொறாமை, கோபம், பேராசை, காமம், அகங்காரம், ஆணவம், பிறர் துன்பத்தில் மகிழ்தல், கேலி செய்தல், குறை கூறுதல், கோள் சொல்லுதல், கெட்ட வார்த்தை பிரயோகம் போன்ற தீய குணங்களை அடக்கி செயலிழக்கச் செய்து, நேர்மை, வாய்மை, பொறுமை, அன்பு, பாசம், கனிவு, ஒழுக்கம், பக்தி, முயற்சி, ஈகை, அடக்கம், பணிவு, விட்டுக் கொடுத்தல் போன்ற நல்ல குணங்களை மேலோங்கச் செய்யும் சக்தி எம்மிடம் மட்டுமே உள்ளது. அச் சக்தியை நாம் பயன்படுத்தக் கற்றுக்கொண்டால் எமது வாழ்வு மகிழ்ச்சியான பாதையில் செல்லும் என்பதில் ஐயமில்லை. அடுத்தவர்கள் ஆலோசனை, புத்தி கூறலாம். ஆனால் அதை ஏற்றுக்கொண்டு மாறுவது எம்மால் மட்டுமே முடியும்.

Continue reading →
Posted in எண்ணக்குவியல்கள் ·

Archives

July 6, 2024 by Gowry Mohan

எண்ணக்குவியல்கள் கு2 எ4

குவியல் 2                                                                                                                     எண்ணம் 4

நன்றி மறவேல்

ஒரு மனிதன் தனியாக வாழ்வது மிகவும் கடினமாகும். குடும்பத்துடன் ஒருவருக்கொருவர் துணையாகவோ உதவியாகவோ சேர்ந்து வாழ்தலே பாதுகாப்பானதும் மகிழ்ச்சியானதும் திருப்தியானதுமாகும்.

Continue reading →
Posted in எண்ணக்குவியல்கள் ·

Archives

June 29, 2024 by Gowry Mohan

எண்ணக்குவியல்கள் கு2 எ3

குவியல் 2                                                                                                                     எண்ணம் 3

எண் எழுத்து இகழேல்

பொய், களவு, சூது, வாது நிறைந்த இன்றைய காலகட்டத்தில் நாம் ஏமாறாமல் வாழ்வதற்கும் கஷ்டப்பட்டு உழைத்த செல்வத்தை பாதுகாப்பதற்கும் அடிப்படைக் கல்வி அறிவையாவது பெற்றிருக்கவேண்டும். எழுத, வாசிக்க, கணக்கு பார்க்க தெரிந்திருப்பது மிக மிக அவசியம்.

Continue reading →
Posted in எண்ணக்குவியல்கள் ·

Archives

June 22, 2024 by Gowry Mohan

எண்ணக்குவியல்கள் கு2 எ2

குவியல் 2                                                                                                                     எண்ணம் 2

ஆறுவது சினம்

மனிதனுக்குள் இருக்கும் உணர்வுகளுள் ஒன்று கோபம். கோபம் அதிகரிக்க அதிகரிக்க அவனது மனதையும் உடலையும் அது பாதிப்பதுடன் அறிவையும் மழுங்கடிக்கச் செய்கிறது. முகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் கோபம் அத்துடன் தணியாவிடின் அது வாய் மூலம் மனதை புண்படுத்தும் தகாத வார்த்தைகளாகவோ அல்லது மூர்க்கத்தனமான நடத்தைகள் மூலமாகவோ வெளிப்படுகிறது.

Continue reading →
Posted in எண்ணக்குவியல்கள் ·
← Older posts
Newer posts →

Archives

  • July 2025
  • June 2025
  • May 2025
  • April 2025
  • March 2025
  • February 2025
  • January 2025
  • December 2024
  • November 2024
  • October 2024
  • September 2024
  • August 2024
  • July 2024
  • June 2024
  • May 2024
  • April 2024
  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • December 2022
  • November 2022
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022
  • April 2022
  • March 2022
  • February 2022
  • October 2021
  • September 2021
  • June 2021
  • January 2021
  • September 2020
  • May 2020
  • April 2020

Categories

  • எண்ணக்குவியல்கள்
  • கட்டுரைகள்
  • கவிதைகள்
  • சமையலறை
  • சிறுகதைகள்
  • பக்தி கவிதைகள்
  • படித்ததில்பிடித்தது

Recent Posts

  • படித்ததில் பிடித்தது – தொகுப்பு 167
  • நிரந்தர வெற்றி
  • படித்ததில் பிடித்தது – தொகுப்பு 166
  • இடம் மாறிய தருணம்
  • படித்ததில் பிடித்தது – தொகுப்பு 165
© 2020 Tamilkeetru. All rights reserved