“பிறர் தவறை சகிக்கும்போது நீ மனிதன். அதை மன்னிக்கும்போது கடவுள்.”
*****
“அன்பு செலுத்துவது தெய்வ குணம்.
மன்னிப்பது மனித குணம்.
வெறுப்பது அரக்க குணம்.”
*****
“முடியும் என்றால் முயற்சி செய்
முடியாதென்றால் பயிற்சி செய்.”
*****
“ஆசைகளை திருப்தி செய்வதில் அல்ல, மட்டுப்படுத்துவதில் தான் அமைதி உள்ளது.”
*****
“சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.
நிம்மதியாக வாழ முயற்சி செய்.
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்.”
*****
“நீ விழுந்தபோதெல்லாம் தாங்கிப்பிடிக்கும் இந்தக் கை.
மனம் உடையும்போதெல்லாம் தட்டிக்கொடுக்கும் இந்தக்கை.
தனியே நீ அழும்போதெல்லாம் உன் கண்ணீரைத் துடைக்கும் இந்தக் கை.
அது வேறு யார் கையும் அல்ல. உன்னுள் உள்ள உனது தன்னம்பிக்கை.
அதைமட்டும் ஒருபோதும் இழந்துவிடாதே.”
*****
“நீ யாரிடம் உன் இரகசியங்களைச் சொல்கிறாயோ, அவரிடம் உன் சுதந்திரத்தை இழப்பாய் .”
*****
“ஓர் ஆணிண் அல்லது பெண்ணின் புற அழகிற்காக அவர்களை மணப்பது என்பது ஓர் வீட்டின் புற வர்ணப் பூச்சிற்காக அந்த வீட்டையே வாங்குவது போலாகும்.”
*****
“வெற்றி என்பது நீ பெற்றுக் கொள்வது.
தோல்வி என்பது நீ கற்றுக் கொள்வது.
ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்காக சிலவற்றை கற்றுக் கொள்வது தவறில்லை.
தோல்விகளை ஏற்றுக் கொள்ளுங்கள்.”
*****