“என்னிடம் மட்டுமே அன்பாக இருக்க வேண்டும் என்று உரிமையோடு எதிர்பார்க்கையிலேயே பல உறவுகள் தொலைந்துவிடுகிறது.”
*****
“நடந்ததை எண்ணி வருந்துவதைவிட இனி நடக்கப்போவதை யோசிப்பதே நல்லது.
தனியாக இருந்து அதிகமதிகம் யோசித்து உன் சோகங்களை அதிகப்படுத்திக்கொள்ளாதே.
உன் வாழ்வில் வரும் எந்தத் தோல்விகளையும் உன் வாழ்க்கைப் புத்தகத்தின் கடைசிப் பக்கமாக நினைத்தும் விடாதே; ஆக்கியும் விடாதே.
கைகொடு; எழுந்திரு; மகிழ்ச்சியாக இரு.”
*****
“நாம் வாழும்வரை நம்மை யாரும் வெறுக்கக்கூடாது.
நாம் மறைந்த பின்பு நம்மை யாரும் மறக்கக்கூடாது .
அதுதான் வாழ்க்கை.”
*****
“ஒருவனிடம் துக்கமும் தூக்கமும் எப்போது குறையுமோ, அப்போதே அவன் மேதையாகிறான்.”
*****
“ஆழ்மனதின் சக்தியை அதிகப்படுத்துங்கள்.
அப்படி அதிகப்படுத்தியதால்தான் ஐசக் நியூட்டன், பெல், விவேகானந்தர், காந்திஜி போன்ற பல மனிதர்கள் உருவானார்கள்.
எனவே நல்லதைச் செய்துகாட்ட என்னால் முடியும் என்பதை ஆழ் மனதிற்குச் சொல்லிச் சொல்லி உங்கள் மன உறுதியைப் பலப்படுத்துங்கள்.”
*****