“
*குறைகூறி வளர்க்கப்படும் குழந்தை வெறுக்க கற்றுக்கொள்கிறது.
*அடக்கி வளர்க்கபடும் குழந்தை சண்டையிடக் கற்றுக்கொள்கிறது.
*கேலி செய்யப்படும் குழந்தை வெட்கத்தோடு வளர்கிறது.
*அவமானப்படுத்தபடும் குழந்தை குற்றவாளி ஆகிறது.
*ஊக்குவிக்கப்படும் குழந்தை மனத்திடம் பெறுகிறது. சின்ன விசயத்துக்கும் கைகொடுத்து பாராட்டுங்கள்.
*புகழப்படும் குழந்தை பிறரை மதிக்க கற்றுக் கொள்கிறது.
*நேர்மையை கண்டு வளரும் குழந்தை நியாயத்தை கற்றுக்கொள்கிறது.
*பாதுகாக்கபடும் குழந்தை நம்பிக்கை பெறுகிறது.
*நட்போடு வளரும் குழந்தை உலகத்தை நேசிக்க கற்றுக்கொள்கிறது.
4,5 வயதுகளில் குழந்தைக்கு நன்மை, தீமையை பற்றி சொல்லித் தரவேண்டும். தினமும் அரைமணி நேரம் தந்தை, நண்பனைப் போல உரையாடுங்கள்.”
*****