வானத்து நிலவையும்
பூமியில் மலரையும்
ஒன்றாக சேர்த்து
எனக்காக படைத்தானோ
அவளை
என் விழியில் வீழ்த்தினானோ…
இனிமையான தோற்றத்தில்
சொக்கி நிற்க…
இதமான புன்னகையை
தந்துவிட்டாள்…
காதலை அதிலே
இணைத்துவிட்டாள்…
என் விழியில் அவளும்
அவள் விழியில் நானும்
கவிதைகள் வரைந்து படிக்க
அங்கு
இதழ்விரித்து நறுமணம் பரப்பி
மலரத்தொடங்கியது
காதல்…