“அன்பே இன்பம் தரும். பகை எல்லாரையும் அழிக்கும். எங்கும் எப்போதும் எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்துங்கள்.”
*****
“அச்சமே மடமை. அச்சமில்லாமையே அறிவு. தைரியமே ஜெயம் அளிக்கும். துன்பம் ஏற்படும்போது உள்ளம் நடுங்காதே.”
*****
“வியர்வைத்துளிகள் உப்பாக இருக்கலாம். ஆனால் அவை தான் வாழ்வை இனிமையாக மாற்றும்.”
*****
“பிறரை சந்தோஷப்படுத்த சிரிப்பதில் தவறில்லை, காயங்கள் இதயத்தில் இருப்பினும்.”
*****
“மற்றவர்களின் எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்தால்தான் உனக்கு நல்லவன் என்ற பெயர் கிடைக்குமானால் அந்தப் பெயர் உனக்கு வேண்டாம்.”
*****
“ஆசைகளை திருப்தி செய்வதில் அல்ல, மட்டுப்படுத்துவதில் தான் அமைதி உள்ளது.”
*****
“எந்த வீட்டில் அனாதைகளுக்கு அரவணைப்பு கிடைக்கிறதோ, அந்த வீடுதான் உலகின் மிகச் சிறந்த வீடு.”
*****
“உனக்குப் பிடித்தவரின் தீய குணங்கள் உன் கண்ணுக்குத் தெரியாது.
உனக்குப் பிடிக்காதவரின் நல்ல குணங்கள் உன் கண்ணுக்குத் தெரியாது.”
*****