என் விழிகள் என் வசமில்லை…
விலக மறுத்து
தொடர்கின்றன உன்னையே…
என் இதழ்கள் என் வசமில்லை…
மௌனம் காத்து
பேசத் துடிக்கின்றன உன்னிடமே…
நினைவுகளும் என் வசமில்லை
எங்கும் நீயே…
கனவுகளும் என் வசமில்லை
அங்கும் நீயே…
மூச்சும் என் வசமில்லை
வருவது உனக்காகவே…
இதயமும் என் வசமில்லை
துடிப்பது உனக்காகவே…
இந்த உடலும் என் வசமில்லை
இந்த உயிரும் என் வசமில்லை
இரண்டும் வாழ்வது உன்னை நினைத்தே…
என்னை
என்னுள்ளேயே சிறை வைத்திருக்கும்
பெண்ணே!
உன்னை
சிறைப்பிடித்தால் மட்டுமே
விடுதலை எனக்கு…
இதோ
புறப்பட்டுவிட்டேன்
என் விடுதலை நாடி…