
மீன் போன்ற கண்கள் என்றாய்
அதை நீரிலே மிதக்க விட்டாய்…
ரோஜா இதழ்கள் என்றாய்
அதை வாடி வதங்க விட்டாய்…
அன்னம்போல் நடை என்றாய்
அதை தடுமாற வைத்துவிட்டாய்…
காதலின் உண்மை தெரியாத நீ!
காதலின் புனிதம் புரியாத நீ!
காதலின் மென்மை அறியாத நீ!
காதலை பேண முடியாத நீ!
காதல் சொன்னது ஏன்!!!