
“வெற்றிகரமான சாதனைகளுக்கு நான்கு அடிப்படை அம்சங்கள் அவசியம்.
அவை –
இலக்கு நிர்ணயம்,
ஆக்கபூர்வமான சிந்தனை,
கற்பனைக் கண்ணோட்டம்,
நம்பிக்கை
என நான்காகும். “
*****
“பீஷ்மர் துரியோதனனை அழைத்து ஒரு தங்கக்காசைக் குடுத்து “உன் கண்ணில்படும் நல்லவனுக்கு இந்தக் காசைத் தானமாகக் குடு” என்றாராம். போய்ட்டு காசோடு திரும்பி வந்த துரியோதனன் “எல்லாருமே கெட்டவங்களா இருக்காங்க. அதுனால இந்தக் காசை யாருக்கும் குடுக்க முடியலை”னு திருப்பிக் குடுத்தாராம். பீஷ்மர் தருமனை அழைத்து “உன் கண்ணில்படும் நல்லவனுக்கு இந்தக் காசைத் தானமாகக் குடு” என்றாராம். போய்ட்டு காசோடு திரும்பி வந்த தருமர் “எல்லாருமே நல்லவங்களா இருக்காங்க.அதுனால இந்த ஒரு காசு போதாது. நிறைய காசு குடுங்க”னு அந்தக் காசைத் திருப்பிக் குடுத்தாராம்.
எதுவுமே நம் பார்வையில்! நம் எண்ணத்தைப் பொறுத்ததே.
நாமும் மனதால் தருமரை போல வாழ முயற்சிப்போம்.”
*****
“வெற்றி எமது தலையை அலங்கரிக்கும் என்றால்
தோல்வி எமது கால்களைப் பலப்படுத்தும்.”
*****
“நாம் இப்போது இருக்கும் நிலைமைக்கு நாமே பொறுப்பாளிகள்.
நாம் எப்படியெல்லாம் இருக்கவேண்டும் என்று விரும்புகின்றோமோ அப்படி நம்மை அமைத்துக்கொள்ளும் ஆற்றல் நம்மிடமே இருக்கிறது.”
*****
“*ஒவ்வொரு நாளும் குறைந்தது மூன்றுபேரையாவது பாராட்டு.
*மாதம் ஒரு முறையாவது சூரிய உதயத்தைப்பார்.
*’நன்றி’,’தயவுசெய்து’-இந்த வார்த்தைகளை முடிந்தவரை அதிகம் உபயோகி.
*உன் வசதிக்கும் தகுதிக்கும் உட்பட்டு வாழக் கற்றுக்கொள்.
*உன்னை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புகிறாயோ, அப்படியே நீயும் மற்றவர்களை நடத்து.
*ரகசியங்களைக் காப்பாற்று.
*புதிய நண்பர்களைத் தேடிக்கொள், பழைய நண்பர்களை மறந்துவிடாதே.
*தொழில் ரகசியங்களைக் கற்பதில் நேரத்தை வீணடிக்காமல் தொழிலைக் கற்றுக் கொள்.
*உன் தவற்றை தயங்காமல் ஒத்துக்கொள்.
*தைரியமாக இரு. உண்மையில் அவ்வாறு இருக்க முடியாவிட்டாலும், அப்படித் தோற்றம் அளி.
*ஒரு போதும் மற்றவரை ஏமாற்றாதே.
*கவனிக்கக் கற்றுக்கொள். சந்தர்ப்பங்கள் அமைதியாக சில நேரம் தான் வரும்.
*கோபமாக இருக்கும்போது ஒரு முடிவும் எடுக்காதே.
*உன் தோற்றத்தில் எப்போதும் கவனம் இருக்கட்டும்.
*மேலதிகாரிகளையோ பெரியவர்களையோ சந்திக்க செல்லும்போது காரணத்துடனும் நம்பிக்கையுடனும் செல்.
*ஒரு வேலை முடியுமுன் கூலி கொடுக்காதே.
*வதந்தி, வம்பு பேசுவதைத் தவிர்.
*போரில் வெற்றி பெற சண்டையில் விட்டுக்கொடு.
*ஒரே சமயத்தில் நிறைய வேலைகளை ஒத்துக் கொள்ளாதே. பணிவாக மறுத்து விடுவதில் தவறில்லை.
*வாழ்க்கை எப்போதும் ஒரே சீராக இருக்கும் என்று எதிர்பாராதே.
*பொருட்கள் வாங்கும்போது சிறந்ததையே தேர்ந்தெடு.
*’எனக்குத் தெரியாது’, மன்னிக்கவும்’, என்பதை சொல்லத் தயங்காதே..!!”
*****