பட்டாம்பூச்சியாய்…

என்னுள் மூழ்கி
கண்டெடுத்தாய் காதல் முத்து…

என்னுள் மூழ்கி
கண்டெடுத்தாய் காதல் முத்து…

சிவந்த கன்னங்கள்
றோஜா இதழ்கள்
Continue reading →
மலரில் இருந்து சிரிக்கிறாய்
நிலவில் இருந்து குளிர்மை தருகிறாய்

உன் பார்வையில்
மலர்ந்த இதயம்
தடம் புரண்டு
இடம் மாறியது
உன் புன்னகையில்!!!

விழிகள் உரசி
பற்றிய காதலில்
இதயம் உருகி
நீயானாய்…

பெண்ணாய் பிறந்ததில்
பெருமை கொள்வோம்
நற்பண்புகள் கொண்டு
வாழ்ந்திடுவோம்…

உனது
உள்ளத்தில் ஊற்றெடுக்கும் அன்பில்
கலந்திருப்பதை
கண்டேன்…

காத்திருந்து பார்த்திருந்து
வறட்சியானது
மண் மட்டுமல்ல
விழிகளும் தான்…

அமைதியில் அழகைப் பார்த்து ரசிக்கின்றேன்
கோபத்தில் சீற்றம் கண்டு மலைக்கின்றேன்
கொட்டிக்கிடக்கும் அதிசயம் நினைத்து வியக்கின்றேன்
மறைந்திருக்கும் இரகசியம் தேடி தவிக்கின்றேன்
புரியாத புதிராய் இருக்கும் அன்னையே!
உன்னை
பணிகின்றேன்
ஆராதிக்கின்றேன்
காதலிக்கின்றேன்!!!

உணவாக உதிரத்தை
உறிஞ்சியதை
நினைத்துப் பார்…
அக்கணமே அழிந்து போகும்
உணவுக்காய் அன்னையை
தவிக்கவைக்கும்
உன் எண்ணம்…