உழைப்பு

நிறைந்த செல்வம்
குடும்பத்தில் சிக்கல்
மனதில் குழப்பம்
ஓய்வில்லா உழைப்பின் ஊதியம்…

நிறைந்த செல்வம்
குடும்பத்தில் சிக்கல்
மனதில் குழப்பம்
ஓய்வில்லா உழைப்பின் ஊதியம்…

தினம்
வாசலில் கோலமிடுகின்றேன்
உனக்காகவே…

நீ தந்த வசந்தம்
என்னை விட்டு
உன்னோடு சென்றுவிட்டது…

கருந்திட்டுக்களாய் படிந்திருக்கும்
அழுக்குகளை
கழுவி அகற்றுகிறது
வானம்…!!!
மழை!!!

“கோபத்தில் ஒருவரை ஒரு அடி அடித்துவிடுவது எளிது.
ஆனால் எழும் கையை தாழ்த்தி மனதை கட்டுப்படுத்தி அமைதியாய் இருப்பது கடினமான செயல்.
இந்த கடினமான செயலைத்தான் நீ பழகிக்கொள்ள வேண்டும்.”
*****
Continue reading →
முட்டாளாகிறாள் பெண்…
காதல் பூசிய வார்த்தைகள் சிந்தி
கவர்ந்து காரியம் முடித்த கயவன்
வேஷம் கலைத்து செல்லும்போது!!!

நேர்மையான எண்ணங்கள் நிறைந்த
தூய்மையான உள்ளங்களின்
நம்பிக்கை கொண்ட
முயற்சி
வெற்றி அடைவது உறுதி…

நிலவாய் வந்து
விலகிச் சென்றாய்
தணலாய் தகிக்குது
நெஞ்சம்…