காதல் மொழி பேசிடு

நிலவாய் வந்து
விலகிச் சென்றாய்
தணலாய் தகிக்குது
நெஞ்சம்…

நிலவாய் வந்து
விலகிச் சென்றாய்
தணலாய் தகிக்குது
நெஞ்சம்…

பார்த்து பார்த்து ரசிக்கின்றேன்
நினைத்து நினைத்து மகிழ்கின்றேன்

விரைவில் வருவேன் என்றாய்
பசுமையை கொண்டு சென்றாய்…

அன்பால் கட்டிவைத்து
பாசத்தால் மூழ்கடித்து
காதலால் திணறடித்து
புரிந்துணர்ந்து
விட்டுக்கொடுத்து
வாழ்க்கைத் துணையோடு
இணைந்து வாழும் வாழ்க்கை
என்றென்றும் சொர்க்கமே…