கதிரவனுக்காக
தேன் சமைத்து சுகந்தம் இட்டு
இதழ்களால் மூடி
காத்திருக்கும் மலர்கள்…
தேன் சமைத்து சுகந்தம் இட்டு
இதழ்களால் மூடி
காத்திருக்கும் மலர்கள்…
அயராது விழித்து
கற்றிடுவேன்
ஓயாது உழைத்து
முன்னேறிடுவேன்
துணையாக உந்தன் காதலிருந்தால்…
பிறக்கும் குழந்தைகள்
உள்ளம் தூய்மை…
அதை பேணிக்காப்பது
பெற்றோர் கடமை…
எனக்காகவே படைத்தானோ
பிரம்மன் உன்னை…
உன்னுள்ளே ஒளித்து வைத்தானோ
எந்தன் காதலை…
என் விழிகள் என் வசமில்லை…
விலக மறுத்து
தொடர்கின்றன உன்னையே…
கள்வனே!
கன்னம் வைத்து புகுந்துவிட்டாய்
யாரும் அறியாமலே…
போராடி கொன்றுவிட்டாய்
தனிமையை
துணையாக விட்டுச் சென்றாய்
இனிமையை…
உணர்வுகள்
உன்னை ஏற்றுக்கொள்ள
கள்ளியாக்கிவிட்டாய்
என்னையும்!!!
உள்ளத்தை சுற்றி
ஆயிரம் தளைகள்…
தகர்த்துவிட்டாய்
அனைத்தையும்…
கைப்பற்றிவிட்டாய்
ஆட்சியை…
கவலையின்றி நிர்மலமாய்
ஓடி விளையாடும் மேகங்கள்
கவலைகொண்டு கட்டியணைத்து
முகம் கறுத்திருப்பது ஏனோ…!!!
மலர்களை பார்க்கும்போதெல்லாம்
அங்கு
உன் முகம் தெரியுதடி…