மலர்ந்த காதல்
மலர்களில் துயின்ற நறுமணத்தை
கடத்திச் சென்றது
காற்று
அதை பரப்பிச் சென்றது
தென்றல்…
மலர்களில் துயின்ற நறுமணத்தை
கடத்திச் சென்றது
காற்று
அதை பரப்பிச் சென்றது
தென்றல்…
உறங்கும் உணர்வுகளை
எழுப்பிவிட்டாயே
பின்விளைவுகளை
அறியாமலே…
என்றுமில்லாது
தடம்புரண்டு உள்ளம்
தடுமாறுவது ஏன்!!!
செல்லக்கண்ணா சின்னக்கண்ணா
பட்டுக்கண்ணா குட்டிக்கண்ணா
கண்ணுறங்கு கண்ணுறங்கு
ஆனந்தமாய் கண்ணுறங்கு…
இமையோடு இமை தழுவ
மறுத்தன…
இதழோடு இதழ் சேர
மறந்தன…
மூளையை கசக்கி
அறிவை பயன்படுத்தி
சிகரத்தை தொடலாம்…
தேன்துளிகள் கட்டி வைத்து
காத்திருந்தன
மலர்கள்…