வீறுநடை போட்டுவரும்புத்தாண்டே!
இயற்கையின் சீற்றங்கள்
மனிதரின் போராட்டங்கள்
பிரித்துச் சென்ற உறவுகளை
இணைத்து மகிழ்ந்திடு…
பறித்துச் சென்ற உறவுகளை
நினைந்துருகும் உயிர்களுக்கு
அமைதி தந்து வளர்ந்திடு…
இயற்கையின் சீற்றங்கள்
மனிதரின் போராட்டங்கள்
பிரித்துச் சென்ற உறவுகளை
இணைத்து மகிழ்ந்திடு…
பறித்துச் சென்ற உறவுகளை
நினைந்துருகும் உயிர்களுக்கு
அமைதி தந்து வளர்ந்திடு…
காதல் வசப்பட்ட
மேகங்கள்
கசிந்துருகி
முத்தமிட்டன
பூமகளை…
உதிரத்துடிக்கும் வார்த்தைகள்
புண்ணாக்குமா பிறர் மனதை…
செய்யத்துடிக்கும் செயல்கள்
தடுக்குமா பிறர் உயர்வை…
செல்லத்துடிக்கும் பாதை
அழிக்குமா பிறர் வாழ்வை…
தேவதையை
பார்த்தேன் ரசித்தேன்
அடையும் எண்ணமில்லை…
உன்னை பார்த்ததும்
பிறந்த புன்னகை
தொற்றிக்கொண்டதோ
உன் வசம்…
அதில் தொலைந்துவிட்டதே
என் மனம்…
கோபம் கொண்டு
வெளியேறினையா…
அழிவைத் தரும்
ஆவேசம்
அவசியம் தானா…
அமைதிகொள்…
உன்னை
எதிர்க்கும் சக்தி
எமக்கில்லை…
வண்ணங்கள் பூசி
கவர்ச்சி உடை அணிந்து
பொம்மை போல பவனி வரும்
பெண்ணே!