காதல் நதி
மலரொன்றின் பயணம்
மனதை தொட்டபோது
உணர்வுகளின் உதயம்
இயந்திர இதயத்தில்…
மலரொன்றின் பயணம்
மனதை தொட்டபோது
உணர்வுகளின் உதயம்
இயந்திர இதயத்தில்…
பெண்ணவளை
நினைக்கும்போதெல்லாம்
உள்ளம் பொங்குவதும்
உவகை பெருகுவதும்
ஏன்…
உன்னைப் பார்த்ததும்
இதயம் வரையும் கவிதைகள்
காத்திருக்கின்றன
உன் புன்னகைக்காக…
மான்விழியால் மயக்கிவிட்டாள்
மந்திரத்தால் கட்டிவிட்டாள்…
காலம் தந்து செல்லும்
வாய்ப்புகள்…
பற்றினால்
விடிவு நிச்சயம்…
தவறினால்…!!!
சூழ்ந்திருந்த சுமைகள்
முள்வேலியாய்…
வாழ்க்கையோ
இயந்திரமாய்…
எதையும் தாங்கும் உள்ளம்
ஆனால்
தாங்க மறுக்கிறது
உனது பிரிவை…