குவியல் 8 எண்ணம் 3
சுற்றுலாத்துறை

ஒரு நாட்டிற்கு பெரும் வருமானத்தை ஈட்டித்தரும் துறைகளில் ஒன்று சுற்றுலாத்துறையாகும். இது அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெரும் பங்கினை வகிக்கிறது. அத்துடன் வேலை வாய்ப்பையும் அதிகரிக்கிறது. வெளிநாட்டுப் பயணிகளின் வருகையால் மக்களின் பொது அறிவு விருத்தி அடைவதுடன் அவர்களை வழிநடத்துவதற்கு பல மொழிகளை அறிந்தும் கற்றும் மக்கள் தங்களை தயார்படுத்துவதன் மூலம் தங்கள் அறிவை மேம்படுத்துகின்றனர். இதனால் மக்களின் முன்னேற்றத்திற்கும் சுற்றுலாத்துறை வழிவகுக்கிறது. சுற்றுலா, நாடுகளுக்கிடையிலான உறவை பலப்படுத்துகிறது. அதுமட்டுமல்லாமல் வெளிநாட்டு பயணிகளின் வருகை காரணமாக நாடு சுத்தமாகவும் அழகாகவும் பராமரிக்கப்படுகிறது.
Continue reading





