
சகியே!
விலகாதே…
விலகினால்
நான் வீழ்ந்திடுவேன்
என் துணை அல்லவா நீ…

“நம்மிடம் சொல்லும் பொய்யை விட வருத்தம் தருவது, நாம் அந்த உண்மையைப் பெற தகுதியற்றவர்கள் என்ற அவர்களின் எண்ணம் தான்.”
*****
“அச்சம் என்பது உங்களை நீங்களே தோற்கடித்துக்கொள்ளப் பயன்படுத்தும் ஆயுதம்.
அச்சத்தை துரத்தவேண்டும் என்று நினைக்காதீர்கள்.
அச்சத்தை உருவாக்காமல் இருக்கமுடியுமா என்று பாருங்கள்.”
*****
Continue reading →
“தவறுகளை ஒப்புக்கொள்ள மறுப்பதைவிட பெரிய அவமானம் எதுவுமில்லை.”
*****
“வெற்றி பெறுவது எப்படி என்று யோசிப்பதை விட, தோல்வி அடைந்தது எப்படி என்று யோசித்துப்பாருங்கள். நீங்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள்.”
*****
Continue reading →
“லட்சியத்துடன் வாழுங்கள்
விவேகமுள்ள சிறந்த நண்பன் இறைவன் மட்டுமே. எப்போது நம்மை அடிக்கவேண்டும், எப்போது அரவணைக்க வேண்டும் என்பதை நன்கு அறிந்தவன் அவனே.
நல்ல லட்சியங்களுக்காக மனிதன் வாழ வேண்டும். வாழ்வில் நற்பணிகளைச் செய்ய வேண்டும். அதற்காகத் தான் இறைவன் நமக்கு மனிதப்பிறவி கொடுத்திருக்கிறான்.
நம்மிடம் உள்ள குறை, நோய், கவலை அனைத்தையும் தீர்க்கும் சிறந்த மருத்துவனான இறைவனே ஆத்மாவாக நம்முள் குடி கொண்டு இருக்கிறான்.
மனிதர்களை நேசி. அவர்களுக்குத் தொண்டு செய். ஆனால், அவர்களின் பாராட்டுதலுக்கு ஆசைப்பட்டு விடாதே.
உன்னைத் தூய்மைப்படுத்தும் பொறுப்பைக் கடவுளிடம் ஒப்படைத்து விடு. உன்னிடம் உள்ள தீமையைப் போக்கி நன்மையை நிச்சயம் அவன் அருள்வான்.”
*****
Continue reading →
சித்திரைப் புத்தாண்டானது இலங்கையில் சிங்கள மற்றும் தமிழ் மக்களால் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும்.
சித்திரை மாதத்தின் முதல் நாள் புத்தாண்டு பிறக்கிறது.
இப்பண்டிகை அன்றும் அதற்கு முதல் நாளுமாக இரு நாட்கள் தேசிய விடுமுறையாக அறிவிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது.
முதல் நாள் வீட்டை சுத்தம் செய்து பண்டிகை கொண்டாடுவதற்காக ஆயத்தம் செய்வார்கள்.
பண்டிகை அன்று தலைக்கு மருத்துநீர் வைத்து தோய்ந்து புத்தாடை அணிந்து கோவிலுக்குச் செல்வார்கள்.
புத்தாண்டு பிறக்கும் நேரம் பட்டாசுகள் கொழுத்தி மகிழ்வர்.
வீடுகளில் பொங்கல் செய்து வழிபாட்டறையில் தேங்காய், பழம், பாக்கு, வெற்றிலை போன்ற மங்கலப் பொருட்களுடன் வைத்து கடவுளுக்குப் படைத்து உண்பார்கள்.
பலகாரங்கள் செய்து உறவினருக்கும் அயலவர்க்கும் நண்பர்களுக்கும் கொடுத்து மகிழ்வார்கள்.
சித்திரை வருடப்பிறப்பன்று குறித்த நல்ல நேரத்தில் வீட்டில் உள்ள பெரியவர்கள் மற்றவர்களுக்கு பணம், கைவிசேடமாகக் கொடுத்து ஆசிர்வதிப்பர்.
பண்டிகை அன்று போர்த் தேங்காய் உடைத்தல், வழுக்கு மரம் ஏறல், முட்டி உடைத்தல், கிளித்தட்டு போன்ற பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடி மகிழ்வர்.
ஏனையோருக்கு உதவுதல், ஒற்றுமை, பொறுமை, பெரியோரை மதித்தல் போன்ற நற்குணங்களை பெறுவதற்கு பண்டிகைகள் வழிவகுக்கின்றன.
*****

“சுற்றி இருப்பவர்கள் சொல்வதையெல்லாம்
கேட்டுக்கொள்…
கற்றுக்கொள்…
தீர்மானிப்பது உன் சுயமாக இருக்கட்டும்.”
*****
Continue reading →
அடுத்தவர் வெற்றியில் பொறாமைப்பட்டு
மற்றவரை மிதித்து முன்னேறி
குறுக்கு வழியில் சென்று
தகுதிக்கு மீறி ஆசைப்பட்டு
கிடைக்கும் வெற்றி
நிலைப்பது
குறுகிய காலமே…

“ஒரு நாள் பணக்கார
தந்தை அவரது மகனை வெளியூர்
கூட்டிச்சென்றார்.
அவரது மகனுக்கு ஏழைகள்
எப்படி வாழ்கிறார்கள்
என்று காண்பிக்க எண்ணி, ஒரு ஏழை குடும்பத்துடன் தங்கினர்.
2 நாட்கள் அங்கு இருந்துவிட்டு வீடு திரும்பினர்.
வரும் வழியில் மகனை பார்த்து தந்தை கேட்டார்.