
விழிகளை இழுத்து
அறிவை மயக்கி
சிலையாக்கியது
அழகு…

“உனக்கு இருப்பவைகளுக்காக நன்றிகொள்.
உனக்கு இருக்கும் வாழ்க்கை அநேகருக்கு இல்லை.”
*****
“பிறருடைய பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது.
புகழ்ந்தாலும் இகழ்ந்தாலும் நிலை தளரக்கூடாது.”
*****
Continue reading →
“அழகான உறவிற்கு அடிப்படை விட்டுக்கொடுக்கும் தன்மையும், விருப்பமும் தான். நீங்கள் எவ்வளவு பேரானந்தமாக இருக்கிறீர்கள் என்பதை பொறுத்துத்தான் இவை இரண்டும் அமையும்.”
*****
“புகழ் மிக்கவராக இருக்கவேண்டும் என்பது ஒரு நோய். இந்த நோய்வாய்ப்பட்டவர்கள், அதற்காக அத்தனை விதமான முட்டாள்தனங்களையும் செய்வார்கள்.”
*****
Continue reading →
திருமணம் என்பது ஒரு ஆணும் ஒரு பெண்ணும் இணைந்து வாழ்க்கையை ஆரம்பிப்பதற்கு நடாத்தப்படும் ஒரு புனிதமான சடங்கு. திருமணத்தின் பின் இருவரும் பொறுப்புடனும் விட்டுக்கொடுத்தலுடனும் சில விதிமுறைகளைப் பின்பற்றி நடந்தாலே மகிழ்ச்சியாக வாழ முடியும்.
முற்காலத்தில் பெண்கள் கணவனுக்காகவும் பிள்ளைகளுக்காகவுமே தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தார்கள். அவர்களுக்கென்று விருப்பு வெறுப்பு பெரிதாக ஏதும் இருந்ததில்லை.
Continue reading →
“பிறவியே நரகம்.
பிறவிப் பிணியை நீக்கி மரணமில்லாப் பெருவாழ்வை அடைவதே சொர்க்கம்.”
“எல்லோரும் வெல்ல வேண்டியது நமக்குள்ள கோபம் என்னும் கொடியவனை.”
“எல்லோரும் கொல்ல வேண்டியது தான் என்னும் ஆணவத்தை.”
*****
Continue reading →
பூமியில் வண்ணங்கள்
இரசித்துப் பயனை பெற்றிடுவீர்
இயற்கை தந்த வரமது
அழித்து அழிவைத் தேடாதீர்…

“உனக்கு நீ நல்லவனாய் இருந்தால் போதும்.
மற்றவருக்கு நீ கெட்டவனாய் தெரிந்தால் உன் குற்றமில்லை.
கண்ணில் பிழை என்றால் பிம்பமும் பிழையே.
அது பார்க்கப்படுபவன் பிழை அல்ல, பார்ப்பவன் பிழை.”
*****
Continue reading →
இயற்கை தந்துகொண்டிருக்கும் வரங்களில் ஒன்று நீர். நீர் இல்லாமல் இவ்வுலகில் எந்த உயிரினமும் உயிர் வாழ முடியாது. நீரை மழை தருகிறது. அந்த மழையை இயற்கை எமக்குத் தருகிறது.
“நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான் இன்று அமையாது ஒழுக்கு.”
என்ற திருவள்ளுவரின் திருக்குறள், நீர் இல்லாமல் இந்த உலகமும் உயிர்களும் நிலைத்து நிற்க முடியாது என்பதையும் நீர் கிடைப்பதற்கு மழையும் அவசியம் என்பதையும் குறிப்பிடுகின்றது.
Continue reading →
கண் தெரியாத சிறுவன் ஒருவன் ஒரு கோவில் அருகில் பிச்சை எடுத்து கொண்டிருந்தான்.அவன் எதிரில்’”எனக்கு இரண்டு கண்களும் தெரியாது,தயவு செய்து தருமம் பண்ணுங்கள்” என்று எழுதி இருந்தது.
அந்த வழியில் போவோர் வருவோர் எல்லாம் அதை பார்த்து கொண்டே சென்றார்கள், யாரும் தருமம் பண்ணுவது மாதிரி தெரியவில்லை.
ஒரு நபர் தன்னுடைய பர்சில் இருந்து பணத்தை எடுத்து அவன் தட்டில் போட்டார்.பிறகு அங்கு வைத்து இருந்த போர்டின் பின் பகுதியில் ஒரு வாசகத்தை எழுதி எல்லாரும் பார்க்கும்படி வைத்து விட்டு சென்றுவிட்டார்.