Author Archive
May 25, 2026 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 188
“பகிர்வின் மணம் அந்த மாலைப் பொழுது மெல்லிய காற்றுடன் நகர்ந்து கொண்டிருந்தது. அந்த முதியவர் தன் வீட்டுத் தோட்டத்தில் குனிந்து செடிகளுக்கு நீர் ஊற்றிக்கொண்டிருந்தார். அவர் முகத்தில் தென்பட்ட அமைதி, அந்த இளைஞனை அவரிடம் ஈர்த்தது. அவன் மிகுந்த மன அழுத்தத்துடன் அவரிடம் வந்தான். “ஐயா, எனக்கு ஒரு சந்தேகம். இன்று உலகம் முழுக்கப் பேராசையும் சுயநலமுமே பெருகிவிட்டதே! நேர்மையாக இருப்பவர்கள் நசுக்கப்படுகிறார்கள். இத்தகைய சூழலில் ஒரு மனிதன் எப்படி நன்னம்பிக்கையோடு வாழ்வது? எங்கு பார்த்தாலும் எதிர்மறையான […]
May 25, 2026 by Gowry Mohan
விடுமுறை நாளொன்று…
இந்த விடுமுறைக்கு நாங்கள் சிகிரியா குன்றுக்கு (இலங்கை) சென்றோம். அதிகாலை 4.30 மணியளவில் கொழும்பிலிருந்து காரில் பயணத்தை தொடங்கினோம். காலை 7 மணியளவில் சிகிரியாவை சென்றடைந்தோம்.
May 5, 2026 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 187
“மீண்டெழுந்த வீரம்” அந்தக் கார் இருள் சூழ்ந்த குகைக்குள் விக்கிரமனின் பெருமூச்சு மட்டும் எதிரொலித்துக் கொண்டிருந்தது. ஒரு காலத்தில் ஆயிரக்கணக்கான வீரர்கள் “வாழ்க!” என முழக்கமிட, மத்தளங்கள் அதிர யானை மீது பவனி வந்த குறுநில மன்னன் அவன். ஆனால் இன்று, தன் வாள் உடைந்த நிலையில், உடல் எங்கும் காயங்களோடு, ஒரு அகதியாகக் குகையில் அமர்ந்திருந்தான். எதிரி நாட்டுப் படைகள் அவன் கோட்டையைத் தகர்த்து, அவன் குடிமக்களை அடிமைப்படுத்தி, அவன் மானத்தைச் சிதைத்துவிட்டன.
May 5, 2026 by Gowry Mohan
பண்டிகைகளால் நாம் பெறும் நன்மைகள்
இன்றைய காலகட்டத்தில் மக்கள் தொகை அதிகரிக்க அவர்களின் தேவைகளும் அதிகரிக்க அவற்றை பூர்த்தி செய்வதற்கு மனிதன் நேரம், காலம் பார்க்காது ஓடி ஓடி உழைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான். அவனது வாழ்க்கை இயந்திரத்தனமாக மாறிவிட்டது. இப்படியான சூழ்நிலையில் மனிதன் சற்று ஓய்வெடுக்கவும், ஒன்றுசேர்ந்து இன்புற்றிருக்கவும் பண்டிகைகள் துணை புரிகின்றன. அது மட்டுமல்லாது மனிதன் தனது மதம், கலாச்சாரம், கலைகள், வாழ்க்கைமுறை, கட்டுப்பாடுகள், மற்றும் பாரம்பரிய விளையாட்டுக்கள் என்பனவற்றை மறக்காமல் இருக்க பண்டிகைகள் காரணமாக அமைகின்றன.
April 12, 2026 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 186
“அருமையான பதில்! ஒரு வகுப்பறையில், ஆசிரியர் குழந்தைகளிடம், “உலகிலேயே ‘காதலின் சிகரம்’ என்று அழைக்கப்படும் இடம் எது?” என்று கேட்டார். 🥰 வகுப்பு முழுவதுமே ஒரே குரலில், “தாஜ் மஹால்!” என்று முழங்கியது. ஆனால், ஒரே ஒரு மாணவன் மட்டும் ராமர் சேது பாலம் (Ram Setu) என்று பதிலளித்தான்.
April 12, 2026 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 185
“உன் கை ரேகையை பார்த்து எதிர் காலத்தை நம்பி விடாதே… ஏன் என்றால் கை இல்லாதவனுக்கும் எதிர் காலம் உண்டு.” ***** “வெற்றியை விட தோல்விக்கு பலம் அதிகம் வெற்றி சிரித்து மகிழ வைக்கும்… தோல்வி சிந்தித்து வாழ வைக்கும்.” *****
April 12, 2026 by Gowry Mohan
ஔி வீசும் தாரகை
விழிகளுக்கு விருந்து படைத்துஎன்னை கட்டி வைத்த பெண்ணே!உள்ளத்துள் ஊடுருவிஉணர்வுகளை ஆட்சி செய்யும் பெண்ணே!
March 21, 2026 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 184
“குழந்தையை சிறப்பாக வளர்க்கவேண்டுமென்றால் நாம் முதலில் வளரவேண்டும். குழந்தையை வளர்ப்பது பற்றியெல்லாம் கவனம் வைத்துக்கொள்ள வேண்டாம். நான் வளரவேண்டும் என்று கவனம் வைத்துக் கொள்ளுங்கள். அதன்பின் உங்கள் அருகில் இருந்தாலே குழந்தை நன்றாக வளர்ந்துவிடும். எங்கேயும் ஒரு மோசமான தாய், தந்தை இருக்கலாம், மோசமான டீச்சர் இருக்கலாம், ஆனால் மோசமான குழந்தை கிடையாது.” *****
March 21, 2026 by Gowry Mohan
ஏன்?
மீன் போன்ற கண்கள் என்றாய்அதை நீரிலே மிதக்க விட்டாய்… ரோஜா இதழ்கள் என்றாய்அதை வாடி வதங்க விட்டாய்… அன்னம்போல் நடை என்றாய்அதை தடுமாற வைத்துவிட்டாய்… காதலின் உண்மை தெரியாத நீ!காதலின் புனிதம் புரியாத நீ!காதலின் மென்மை அறியாத நீ!காதலை பேண முடியாத நீ!காதல் சொன்னது ஏன்!!!
March 6, 2026 by Gowry Mohan