Author Archive
February 4, 2026 by Gowry Mohan
திருமண பந்தத்தில் பெண்
திருமணம் என்பது ஒரு ஆணும் ஒரு பெண்ணும் இணைந்து வாழ்க்கையை ஆரம்பிப்பதற்கு நடாத்தப்படும் ஒரு புனிதமான சடங்கு. திருமணத்தின் பின் இருவரும் பொறுப்புடனும் விட்டுக்கொடுத்தலுடனும் சில விதிமுறைகளைப் பின்பற்றி நடந்தாலே மகிழ்ச்சியாக வாழ முடியும். முற்காலத்தில் பெண்கள் கணவனுக்காகவும் பிள்ளைகளுக்காகவுமே தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தார்கள். அவர்களுக்கென்று விருப்பு வெறுப்பு பெரிதாக ஏதும் இருந்ததில்லை.
January 8, 2026 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 180
“பிறவியே நரகம்.பிறவிப் பிணியை நீக்கி மரணமில்லாப் பெருவாழ்வை அடைவதே சொர்க்கம்.” “எல்லோரும் வெல்ல வேண்டியது நமக்குள்ள கோபம் என்னும் கொடியவனை.” “எல்லோரும் கொல்ல வேண்டியது தான் என்னும் ஆணவத்தை.” *****
January 8, 2026 by Gowry Mohan
இரசித்துப் பயனடைவோம்
பூமியில் வண்ணங்கள்இரசித்துப் பயனை பெற்றிடுவீர்இயற்கை தந்த வரமதுஅழித்து அழிவைத் தேடாதீர்…
December 25, 2025 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 179
“உனக்கு நீ நல்லவனாய் இருந்தால் போதும்.மற்றவருக்கு நீ கெட்டவனாய் தெரிந்தால் உன் குற்றமில்லை.கண்ணில் பிழை என்றால் பிம்பமும் பிழையே.அது பார்க்கப்படுபவன் பிழை அல்ல, பார்ப்பவன் பிழை.” *****
December 25, 2025 by Gowry Mohan
நீரும் இயற்கையும்
இயற்கை தந்துகொண்டிருக்கும் வரங்களில் ஒன்று நீர். நீர் இல்லாமல் இவ்வுலகில் எந்த உயிரினமும் உயிர் வாழ முடியாது. நீரை மழை தருகிறது. அந்த மழையை இயற்கை எமக்குத் தருகிறது. “நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான் இன்று அமையாது ஒழுக்கு.” என்ற திருவள்ளுவரின் திருக்குறள், நீர் இல்லாமல் இந்த உலகமும் உயிர்களும் நிலைத்து நிற்க முடியாது என்பதையும் நீர் கிடைப்பதற்கு மழையும் அவசியம் என்பதையும் குறிப்பிடுகின்றது.
December 17, 2025 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 178
கண் தெரியாத சிறுவன் ஒருவன் ஒரு கோவில் அருகில் பிச்சை எடுத்து கொண்டிருந்தான்.அவன் எதிரில்’”எனக்கு இரண்டு கண்களும் தெரியாது,தயவு செய்து தருமம் பண்ணுங்கள்” என்று எழுதி இருந்தது. அந்த வழியில் போவோர் வருவோர் எல்லாம் அதை பார்த்து கொண்டே சென்றார்கள், யாரும் தருமம் பண்ணுவது மாதிரி தெரியவில்லை. ஒரு நபர் தன்னுடைய பர்சில் இருந்து பணத்தை எடுத்து அவன் தட்டில் போட்டார்.பிறகு அங்கு வைத்து இருந்த போர்டின் பின் பகுதியில் ஒரு வாசகத்தை எழுதி எல்லாரும் பார்க்கும்படி […]
December 17, 2025 by Gowry Mohan
எண்ணக்குவியல்கள் கு8 எ3
குவியல் 8 எண்ணம் 3 சுற்றுலாத்துறை ஒரு நாட்டிற்கு பெரும் வருமானத்தை ஈட்டித்தரும் துறைகளில் ஒன்று சுற்றுலாத்துறையாகும். இது அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெரும் பங்கினை வகிக்கிறது. அத்துடன் வேலை வாய்ப்பையும் அதிகரிக்கிறது. வெளிநாட்டுப் பயணிகளின் வருகையால் மக்களின் பொது அறிவு விருத்தி அடைவதுடன் அவர்களை வழிநடத்துவதற்கு பல மொழிகளை அறிந்தும் கற்றும் மக்கள் தங்களை தயார்படுத்துவதன் மூலம் தங்கள் அறிவை மேம்படுத்துகின்றனர். இதனால் மக்களின் முன்னேற்றத்திற்கும் சுற்றுலாத்துறை வழிவகுக்கிறது. சுற்றுலா, நாடுகளுக்கிடையிலான உறவை […]
December 10, 2025 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 177
ஒரு ஊரில் ஒரு கப்பல் வியாபாரி இருந்தார்.அவரிடம் இருந்த ஒரு பெரிய கப்பல் பழுதாகி விட்டது.ஊரில் உள்ள பெரிய பெரிய மெக்கானிக் எல்லாம் வரவழைத்து கப்பலின் இஞ்சினை சரி செய்ய சொன்னார் ஆனால் யாராலும் இஞ்சினில் என்ன பழுது என்று கண்டுபிடிக்க முடியவில்லை.
December 10, 2025 by Gowry Mohan
சுற்றுச் சூழல்
பூமியில் வண்ணங்கள்இரசித்து பயனை பெற்றிடுங்கள்இயற்கை தந்த வரமதுஅழித்து அழிவை தேடாதீர்…
December 4, 2025 by Gowry Mohan